Thursday, November 1, 2012

வருந்தாத மாக்கள்


வருந்தாத மாக்கள் :
--------------------------------


கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்

- வை . நடராஜன்