Friday, October 30, 2015

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

எலுமிச்சை

வெதுவெதுப்பான நீரில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....
அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்
ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் வேறுசில நன்மைகளையும் பெறலாம்.
இப்படி எலுமிச்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைக்கு காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் தான் முக்கிய காரணம். சரி, இப்போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால், அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
செரிமான மண்டலத்திற்கு உதவும் :-
அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமானம் சீரா நடைபெற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவது குறைந்து, நச்சுக்கள் எவ்வித தடையுமின்றி வெளியேறும்.
கல்லீரல் சுத்தமாகும் :-
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகள் சீராக இயங்குவதற்கு உதவும். அதுமட்டுமின்றி, அது கல்லீரலில் நச்சுக்கள் தங்குவதையும் தடுக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் :-
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் அதில் உள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
சருமத்தை சுத்தமாக்கும் :-
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்கும். அதிலும் எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால், அது இரத்த நாளங்களில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வெளிக்காட்டும்.
வாய் துர்நாற்றம் :-
எலுமிச்சை ஜூஸ் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
எடையைக் குறைக்கும் :-
வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, அதிக அளவில் உணவை உட்கொள்ள முடியாதவாறு செய்து, உடல் எடையை விரைவில் குறைக்கும்.
அளவுக்கு அதிகமான எலுமிச்சை வேண்டாம் :-
எலுமிச்சையை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக்கூட
ாது. ஏனெனில் ஒரு எலுமிச்சையின் மூலம் 2 கிலோ எடையைக் குறைக்கலாம். ஆனால் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்று ஒரு டம்ளரில் 4 எலுமிச்சையை பிழிந்து ஜூஸ் போட்டு குடித்தால், எவ்வித மாற்றமும் தெரியாது. மாறாக பற்களின் எனாமல் தன் பாதிக்கப்படும்.
குறிப்பு :-
எப்போது எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னரும் வாயை குளிர்ந்த நீரால் கொப்பளிக்க வேண்டும் ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....
அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்
ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் வேறுசில நன்மைகளையும் பெறலாம்.
இப்படி எலுமிச்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைக்கு காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் தான் முக்கிய காரணம். சரி, இப்போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால், அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
செரிமான மண்டலத்திற்கு உதவும் :-
அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமானம் சீரா நடைபெற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவது குறைந்து, நச்சுக்கள் எவ்வித தடையுமின்றி வெளியேறும்.
கல்லீரல் சுத்தமாகும் :-
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகள் சீராக இயங்குவதற்கு உதவும். அதுமட்டுமின்றி, அது கல்லீரலில் நச்சுக்கள் தங்குவதையும் தடுக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் :-
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் அதில் உள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
சருமத்தை சுத்தமாக்கும் :-
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்கும். அதிலும் எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால், அது இரத்த நாளங்களில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வெளிக்காட்டும்.
வாய் துர்நாற்றம் :-
எலுமிச்சை ஜூஸ் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
எடையைக் குறைக்கும் :-
வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, அதிக அளவில் உணவை உட்கொள்ள முடியாதவாறு செய்து, உடல் எடையை விரைவில் குறைக்கும்.
அளவுக்கு அதிகமான எலுமிச்சை வேண்டாம் :-
எலுமிச்சையை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக்கூட
ாது. ஏனெனில் ஒரு எலுமிச்சையின் மூலம் 2 கிலோ எடையைக் குறைக்கலாம். ஆனால் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்று ஒரு டம்ளரில் 4 எலுமிச்சையை பிழிந்து ஜூஸ் போட்டு குடித்தால், எவ்வித மாற்றமும் தெரியாது. மாறாக பற்களின் எனாமல் தன் பாதிக்கப்படும்.
குறிப்பு :-
எப்போது எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னரும் வாயை குளிர்ந்த நீரால் கொப்பளிக்க வேண்டும்

கோபத்தின் கதை

கோபத்தின் கதை! ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான். ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான். பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும். யாராயினும் நா காக்க

Tuesday, October 27, 2015

இரண்டு ரயில் தண்டவாளம்

🚋🚃இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.👶👧

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....

.உண்மை தான் என்றோம்

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
Fault makers are majority,  they get protected in most situations.

ரயிலில் கிடைத்த ....

"ரயிலில் கிடைத்த பாடம்..."
ஒரு உண்மை சம்பவம்.

கன்னியாகுமரி முதல் மும்பை செல்லும் அதிவிரைவு புகைவண்டி...

இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில், குப்பை பொறுக்கும் ஆள் போன்று, கையில் ஒரு கோனிப்பையுடன் ஒருவர் பெட்டிக்கு வெளியே, பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து பயணிக்க...

சந்தேகத்துடன்,
“என்னங்க! பக்கத்து நிலையத்தில இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன்..."

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல?”

“இல்ல சார், அங்க இருந்தா நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று டிக்கெட்டை காட்டினார்.

"என்ன தொழில் பண்றீங்க?”

அவரது தொழிலை பற்றி விளாவாரியாக சொல்ல சொல்ல நான் பிரமித்துப் போனேன்...

அவர் சொன்னதின் சுருக்கம்...

'அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார்...

வேலை என்னவென்றால்...

கன்னியாகுமரியில் ரயிலில் ஏறி, முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும், வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள், எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள்.

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ.4,000)...

எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ.32,000)...

மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ.2,40,000)...

செலவு நாப்பதாயிரம் (ரூ.40,000))...

மாதவருமானம் இரண்டு லட்சம் (ரூ.2,00,000)...

வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ.24,00,000)...

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும், இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன...' என்றார்.

நான் மலைத்து நின்றேன்...

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான்,  ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து, கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்...

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி, கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம்...

அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்...

மேற்படி பதிவு உணர்த்தும் நீதிகள்...

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்...