Wednesday, July 28, 2010

எண்ணெய் கசிவை அகற்ற புதிய கண்டுபிடிப்பு :


கடலில் எண்ணெய்க் கசிவை அகற்ற அமெரிக்கர்களுக்கு யோசனைக் கூறிய தமிழ் விஞ்ஞானி சேஷாத்ரி ராம்குமார்: கடலில் உள்ள எண்ணெய்க் கசிவை அகற்ற மூன்று அடுக்குகளால் ஆன பைபர்டெக்கை கண்டுபிடித்துள்ளேன். பைபர்டெக் என்பது நெய்யப்படாத துணி, சுருக்கமாக, பஞ்சால் செய்த சாண்ட்விட்ச் என்று சொல்லலாம். கீழே ஒரு அடுக்குப் பஞ்சு, நடுவில் கார்பன், மேலே மீண்டும் ஒரு அடுக்குப் பஞ்சு இது தான் அமைப்பு.தற்போது கடற்கரையையும், கடலின் மேல் பரப்பில் படர்ந்துள்ள எண்ணெயையும் சுத்தப்படுத்துபவர்கள் கைக்கு உறையும், காலுக்கு நீண்ட கம்பூட்சும் அணிந்து சுத்தப்படுத்துவது பாதுகாப்பானதல்ல. காரணம் கடலில் படர்ந்துள்ள எண்ணெய்க் கசிவிலிருந்து நச்சு வாயுக்கள் வெளிப்படும். இது போன்ற சமயங்களில் பைபர்டெக்கை பயன்படுத்தினால், தன் எடையைப் போல் 40 மடங்கு எண்ணெயை அது உறிஞ்சிக் கொள்ளக் கூடியது. அதன் நடுவில் உள்ள கார்பன் நச்சு வாயுக்களை உள்வாங்கிக் கொள்ளும். எனவே, எண்ணெய், அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு இரண்டையும் அகற்றி விடலாம். அது மட்டுமல்ல, இந்த துணியைப் பிழிந்து நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தலாம்.எண்ணெயை சுத்தப்படுத்துவதில் தற்போது பயன்பாட்டில் உள்ள, "பூம்' பஞ்சு உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயைத் தான் உறிஞ்சும். அதுவும் தவிர அது செயற்கை இழைகளால் ஆனது. அதைப் பயன்படுத்திய பின் நிலத்தில் புதைப்பதால், அது எளிதில் மக்காது. ஆனால், பஞ்சு இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்டது; அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை.இந்தியா போன்ற நாடுகளில், "பைபர்டெக்கிற்கு' பயன்பாடு அதிகம் உள் ளது. ராணுவத்தில் பல விஷயங்களுக்கு, உதாரணமாக, நச்சு வாயுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் மாஸ்க் செய்ய பயன்படுத்தலாம்.

Tuesday, July 27, 2010

அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! 
 அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன ! 
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.! 
ழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!

ருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!

மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல

சென்னை : ""மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல,'' என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சமுதாய விழிப்புணர்வு அமைப்பான, சுடர் வம்சத்தின் 5ம் ஆண்டு விழா சென்னை எழும்பூர், "இக்சா' மையத்தில் நேற்று நடந்தது. இந்த அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளாக சமுதாய மற்றும் தனி மனித வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மாணவர்களிடம் நாட்டுப்பற்று, மனிதநேய உணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகள் சமுதாய விழிப்புணர்வு பணியில், மற்ற அமைப்புகளிலிருந்து மாறுபட்டு சிறப்பாக "சுடர்வம்சம்' செயல்படுகிறது. கல்வி தான் மாணவர்களின் சொத்து. பொருளாதார ரீதியில் மாணவர்கள் பின்தங்கியிருந்தாலும், லட்சியங்களை அடைவதில் பின் தங்கிவிடக் கூடாது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடை கிடையாது. கல்வி இல்லையென்றால் தாய், தந்தை கூட மதிக்க மாட்டார்கள்.இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.மாணவ, மாணவியர் 71 பேருக்கு "சுடர்வம்சம்' சார்பில் கல்வி ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் புத்தகங்களை கல்வியாளர் ரமேஷ் பிரபா வழங்கினார்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, கவிஞர் பிறைசூடன் மற்றும் காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் பிரபாகர் ஆகியோருக்கு சுடர்வம்சம் சார்பில், தொழிலதிபர் சீனா தானா விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் ரகுராஜ், ஆலோசகர் சந்திரன் சாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

குழ‌ந்தைகளே நேரத்தை ம‌தியு‌ங்க‌ள்

குழ‌ந்தைகளா.. உ‌ங்‌களது பெ‌ற்றோ‌ர் ‌தினமு‌ம் படியு‌ங்க‌ள் படியு‌ங்க‌ள் எ‌ன்று ‌பு‌த்‌திமத‌ி கூ‌றி‌க் கொ‌ண்டே இரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌அது உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌க்காத பு‌த்‌திம‌தியாக இரு‌க்கு‌ம்.


அவ‌ர்க‌ள் உ‌ங்களை படியு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவ‌த‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம், இ‌ப்போதுதா‌ன் ‌நீ‌ங்க‌ள் படி‌ப்பத‌ற்கான நேர‌ம். இ‌ந்த நேர‌த்தை ‌வீணடி‌த்து‌வி‌ட்டா‌ல் ‌பிறகு ‌நீ‌ங்க‌ள் படி‌க்க ‌நினை‌த்தாலு‌ம் படி‌க்க முடியாது. இதனை உண‌ர்‌ந்துதா‌ன் உ‌ங்களது பெ‌ற்றோ‌ர் உ‌ங்களு‌க்கு பு‌த்‌திம‌தி கூறு‌

கா‌ந்‌தி‌யி‌ன் பொ‌ன்னான வா‌க்குக‌ள்

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் பொ‌ன்னான வா‌க்குகளை ‌பி‌ன்ப‌ற்‌றி அத‌ன்படி நட‌ப்போ‌ம்.
சுத‌ந்‌திர‌த்தை நாடு‌ம் ம‌னித‌ன் ம‌ற்றவ‌ர்களை அடிம‌ை‌ப்படு‌த்துவது ப‌ற்‌றி எ‌ண்ண‌க் கூடாது.

சீ‌ர்‌திரு‌த்தவா‌தி‌யி‌ன் பாதை ரோஜா மல‌ர்க‌ள் தூவ‌ப்‌ப‌ட்டத‌ல்ல.

எ‌தி‌ரியை அ‌ன்‌பினா‌ல் ம‌ட்டுமே வெ‌ற்‌றி கொ‌ள்.

உழை‌ப்‌பி‌ன்‌றி உ‌ண்பவ‌ர்களை ‌திருட‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் கூற வே‌ண்டு‌ம்.

வத‌ந்‌திகளை பர‌ப்பு‌ம் ம‌னித‌ன் தன‌்‌க்கு‌ம் சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம் பெரு‌ங்கே‌ட்டினை உ‌ண்டா‌க்கு‌கிறா‌ன்.

கால‌ம் உறு‌‌தியான ந‌ண்பனாகவு‌ம் இரு‌க்‌கிறது. அதே சமய‌ம் கருணைய‌ற்ற பகைவனாகவு‌ம் இரு‌க்‌கிறது.

தா‌ர்‌மீக ‌விளைவுகளை ஒழு‌க்கமான க‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌த்த முடியு‌ம்.

அணு‌க்க‌ள் இடையே இணை‌க்கு‌ம் ச‌க்‌தி இரு‌ப்பதா‌ல்தா‌ன் இ‌ந்த உலகமானது பொடி‌‌ப்பொடியாக உ‌தி‌ர்‌ந்து ‌விழாம‌ல் இரு‌ப்பதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கிறா‌ர்க‌ள்.

அதுபோலவே, உ‌யி‌ர்க‌ளிட‌த்து‌ம் அ‌ன்பு எ‌ன்னு‌ம் இணை‌க்கு‌ம் ச‌க்‌தி இரு‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ன்பு உ‌ள்ள இட‌த்‌திலேயே உ‌யி‌ர் இரு‌க்‌கிறது.

பகைமை அ‌ழிவை‌த் தரு‌கிறது.

ம‌னித ச‌க்‌தி இ‌ன்னு‌ம் ‌ஜீ‌வி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பத‌ற்கு‌க் காரண‌ம் இணை‌க்கு‌ம் ச‌க்‌தியே. இது ‌பி‌ரி‌க்கு‌ம் ச‌க்‌தியை ‌விட பெ‌ரியது.

வா‌ழ்‌க்கை‌க்கு‌ரிய வ‌ழிகா‌ட்டிக‌ள்

நமது ‌மு‌ன்னோ‌ர்க‌ளி‌ல் பல‌ர் வா‌ழ்‌க்கையை அத‌ன் போ‌க்‌கி‌ல் அனுப‌வி‌த்து அத‌ன் நெ‌ளிவு சு‌ளிவுகளை பொ‌ன்மொ‌ழிகளாக நம‌க்கு கூ‌றியு‌ள்ளன‌ர். அவ‌ற்றை‌ப் படி‌த்து அதனை‌ப் ‌பி‌ன்ப‌ற்ற முயலுவோ‌ம்.

பழகிய மனைவி, பழகிய நாய், தயாராக இருக்கும் பணம் ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய நண்பர்கள். ஒரு முட்டாளின் இதயம் அவன் வாயிலிருந்து வருகிறது. ஒரு புத்திசாலியின் வாய் அவன் இதயத்திலிருந்து வருகிறது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்

பைத்தியத்தன்மை கலக்காத மேதை உலகத்தில் யாரும் இல்லை. உங்கள் லட்சியங்களை தைரியமாக வெளியிடுங்கள். யார் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சாதீர்கள். உங்கள் லட்சியத்தைப் பார்த்து உலகம் உங்களை `பைத்தியக்காரன்' என்று கூறும். கூறட்டும்! உண்மையில், நீங்கள் மேதை!! மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன. யோசித்த பிறகு நாவை அசையுங்கள்.
- அரிஸ்டாட்டில்

பகுத்தறிவு என்பது உண்மையை அறிய கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கத் தக்கதும் அதுவே; ஆனால் நாம் அதைத்தான் நம்புவதில்லை. வாழ்க்கை ஒரு கேளிக்கைக் கூடம் என்பது எவ்வளவு பொய்யானதோ, அவ்வளவு பொய்யானதுதான் வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்ற எண்ணமும் ஆகும். வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே.
-டால்ஸ்டாய்

இன்பத்துக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது பிறரும் இன்பம் அனுபவிக்கும்படி நடந்து கொள்வதே. பிறருக்குத் துன்பம் செய்து உன்னால் இன்பம் அனுபவிக்க முடியாது. கருத்து வேறுபாடுகளை நாகரீகத்துடன் ஏற்றுக் கொள்வதும், அவற்றை அழுத்தமாக எதிராளிகள் சுட்டிக் காட்டும்போது ரசிப்பதும், மன வளர்ச்சியின் உன்னதமான அடையாளமாகும். உண்மைதான் மூளையின் எல்லைக்கோடு.
- இங்கர்சால்

செல்வத்தினால் வரும் புகழ் நிலைப்பதில்லை. சாதனையினால் வரும் புகழுக்கு எதுவும் ஈடாகாது. அனைவரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருப்பவர்களிடம் மட்டும் முறையிடுங்கள். நாம் எதை இழந்து விட் டாலும் கவுரவத்தை மட்டும் இழக்க இடம் தரக்கூடாது. மனத்திருப்தி நமக்கு இயற்கையாக கிடைத்த செல்வம். ஆடம்பரம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம்.
- சாக்ரடீஸ்

வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்க நாம் முயல வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி. கவலை வாழ்க்கையின் எதிரி. சுயநலம், பேராசை, கோழைத்தனம் முதலானவைதான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்மசத்ருக்கன். ஒரு மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு. ஆனால் அந்த மனிதனை வெறுக்காதே.
- ஷேக்ஸ்பியர்

சாதனைகளை‌ப் படை‌ப்பத‌ற்கான வ‌ழி

குழ‌ந்தைகளா ஒ‌வ்வொருவரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏதாவது ஒரு ல‌ட்‌சிய‌த்தை‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டு‌ம். தா‌ம் கொ‌ண்ட ல‌ட்‌சிய‌த்தை அடைய அனை‌த்து வ‌ழிக‌ளிலு‌ம் முய‌ற்‌சி செ‌ய்து, அ‌தி‌ல் தோ‌ல்‌வி க‌ண்டாலு‌ம் துவ‌ண்டு‌‌விட‌க் கூடாது. முய‌ற்‌சியே‌ச் செ‌ய்யாம‌ல் இரு‌ப்பதை ‌விட, முய‌ற்‌சி செ‌ய்து தோ‌ல்‌வி அடைவது எ‌வ்வளவோ மே‌ல் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

வா‌ழ்‌க்கை‌யி‌ல் அதுபோ‌ன்று ஒரு ல‌ட்‌சிய‌த்தை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டு‌ம் என ‌சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர் நம‌க்கு அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

அதாவது, வா‌ழ்‌க்கை‌யி‌ல் உ‌ய‌ரிய ல‌ட்‌சிய‌ங்கைள‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அதை அடைவத‌ற்கு எ‌ப்போது‌ம் ‌சி‌ந்தனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். கன‌விலு‌ம், செய‌லிலு‌ம், அதுவே உ‌யி‌ர்‌ப்புட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். உனது மூளை, தசை, நர‌ம்பு, ஒ‌வ்வொ‌ன்று‌ம், அதை ‌நிறைவே‌ற்று‌ம் வேக‌த்துட‌ன் செய‌ல்பட வே‌ண்டு‌ம்.

உ‌ன்னுடைய நோ‌க்க‌ம் அது ம‌ட்டுமே ம‌ற்ற எ‌ல்லாவ‌ற்றையு‌ம் மற‌ந்து‌விடு.

ஒரு முகமாக கு‌வி‌ந்த செய‌ல் முனை‌ப்பு, ச‌க்‌தியையெ‌ல்லா‌ம் ஒடு‌க்‌கி ஒரு சேர சே‌ர்‌க்கு‌ம். ஆ‌ற்ற‌ல் ஆ‌கியவைதா‌ன் ல‌ட்‌சிய‌ங்களை அடைவத‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். கடவு‌ள்,‌ ‌மிருக‌ங்களை‌க் கூட ம‌னிதனை போலவே படை‌த்‌திரு‌க்‌கிறா‌ர். ஆனா‌ல் ‌மிருக‌ங்களு‌க்கு இ‌ந்த ‌சி‌ந்தனை த‌ன்மையு‌ம், செய‌ல் வேகமு‌ம் ‌கிடையாது.

வெறு‌ம் வ‌லிமை ம‌ட்டுமே பெ‌ற்று‌ள்ளதுதா‌ன் ‌வில‌ங்‌கின‌ம்.

அதனா‌ல்தா‌ன் ‌மிகவு‌ம் வ‌லிமை வா‌ய்‌ந்த ‌மிருக‌த்தையு‌ம் கூட ம‌னித‌ன் அட‌க்‌கியாள முடி‌கிறது. ஒரு ‌சிற‌ந்த ம‌னிதனையு‌ம், சாதாரண ம‌னித‌னையு‌ம் ‌பி‌ரி‌ப்பது கூட ‌சி‌ந்தனை ஆ‌ற்ற‌ல்தா‌ன். மேலு‌ம் அவ‌ர்களுடைய ‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌ந்த கரு‌த்தூ‌ன்று‌ம் ச‌க்‌திதா‌ன். இ‌ந்த ச‌க்‌தியை ‌வீணா‌க்க‌க் கூடாது. இ‌ந்த ச‌க்‌தியை வ‌லு‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்கு ‌தியான‌த்‌தி‌ல் ஈடுபடு‌ங்க‌ள்.

தியான‌ம் செ‌ய்வத‌ன் மூல‌ம் ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌ப்பதை செய‌ல்படு‌த்து‌ம் துணிவு‌ம் மனவ‌லிமையு‌ம் உ‌ங்களு‌க்கு ‌கிடை‌க்கு‌ம். இது உ‌ங்க‌ள் ல‌ட்‌சிய‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெற உதவு‌ம் எ‌ன்று இளைஞ‌ர்களு‌க்கு‌ சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்

சுகமான தோல்வி

    தோற்பது சுகம் என் இனியத் தந்தையின் வாதத்தில் தோற்பது சுகம் என் இனியத் தாயின் கண்டிப்பில் தோற்பது சுகம் என் இனிய ஆசானின் அறிவில் தோற்பது சுகம் என் இனிய நண்பனின் விவாதத்தில் தோற்பது சுகம் என் இனிய மனைவியின் ஊடலில் தோற்பது சுகம் என் இனிய மழலையின் விளையாட்டில்  
    என்றும் அன்புடன்
    சா.கி.நடராஜன்.

Saturday, July 17, 2010

தார் சாலையின் தூரத்து வெளிச்சமென..


-ரிஷிசேது

கருத்த இரவின் நீண்டுகொண்டே போகும் 
தார் சாலையின் தூரத்து வெளிச்சமென நீ
நம்பிக்கையை இரைத்துக்கொண்டே போகிறாய்

வெறுமை நிரம்பிக்கிடக்கும் என் இதயத்தில்
நீ ஒருகொத்து ரோஜா மலர்களை வீசிவிடுகிறாய்
அவை ஒவ்வொரு இதழாய் பிரிந்து நரம்புகளெங்கும் பரவி
மூளையை எட்டும்போது நீ அங்கில்லை
நானும் காதலும் தவித்துக்கிடக்கிறோம்

நீ என் வாழ்வு விடியும் வரை காத்திருக்கத்
தயார் என்றாலும் என் இரவுகள் 
நீண்டுகொண்டே போவதின் நிஜம்
உனக்கு பயமூட்டலாம் 
நான் லட்சியப்பறவை என் வானம்
மேகங்களில்லாதது- நீ வானவில்லை எதிர்பார்கிறாய்

மெளனம் நீளும் நம் சந்திப்புகள் முடியும்போது
சாதிப்பதற்கு சில வார்த்தைகளை வீசிப்போகிறாய்
பணம் தின்னிக்கழுகுகள் சுற்றமும் நட்புமாக இருப்பின்
எதுசெய்தால் எது கிடைக்கும்
தொடர் ஓட்டம் காதல், காதலை விழுங்கும்....


rishi_sethu23@rediffmail.com

Sunday, July 11, 2010

உஷாராக உஷாராக உஷாராக

வெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.

http://www.moia.gov.in/writereaddata/pdf/PAC_LIST.pdf

Sunday, July 4, 2010

படிக்காதவர்களுக்கு கண் எதற்கு?


* உள்ளத்தில் இருக்கும் குற்றங்கள் நீங்கவும், அறவழியில் நடக்கவும் வாய்மையை வலியுறுத்தும் அறநூல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதன்படி நடக்கவும் வேண்டும். அறவழியில் நடப்பவர்களின் மனம் தூய்மையாக இருக்கும். தூயவர்களுக்கு அனைத்துமே சொந்தமானதாகும்.

* மனிதர்கள் அனைவருக்கும் கண்கள் இருக்கிறது. அதனைக் கொண்டு புறப்பொருளை பார்க்கிறார்கள். இதற்காக கண் உள்ளவர்கள் அனைவரும் பார்வையுடையவர்கள் என்று கருதக்கூடாது. கல்வியை சரியான முறையில் கற்று, அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவரே உண்மையில் கண் உள்ளவர் ஆவார். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள், புண்களாகவே கருதப்படும். அந்த புண்களுக்கு வலியை மட்டும்தான் உணரமுடியுமே தவிர எதனையும் படித்தறியும் திறன் இருக்காது.

* நிலத்தில் எவ்வளவு ஆழம் தோண்டுகிறீர்களோ அந்த அளவிற்கு நீர் சுரக்கும். மக்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியும் இதைப்போலவே அறிவை பெருக்கித்தருமே தவிர, சற்றேனும் குறைவாக கொடுக்காது. எனவே, அனைவரும் கற்றுத்தேர வேண்டும்.

* கற்றவர்கள் நற்குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். தம்மைவிட மூத்தோருக்கும், குருவிற்கும் பணிந்து நடப்பார்கள். தம்முடன் நீண்டநாள் பழகிய நல்ல நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் விலகி செல்லும்போது வருத்தம் கொள்வார்கள். இவர்களே, அனைவரிலும் உயர்ந்தவராக கருதப்படுவார்கள்.

பகிர்ந்து உண்போம்


* மனம், சொல், செயல் மூன்றாலும் அடங்கி நடப்பவன் உயர்ந்தவர்களின் நன்மதிப்பைப் பெறுவான். அடக்கமில் லாதவன் துன்பத்திற்கு ஆளாவான். புலனடக்கம் பெற்றிருப்பதை விட சிறந்த நன்மை வேறில்லை.
* நடுநிலையுடன் வாழும் ஒருவன் செல்வநிலையில் தாழ்வுநிலை அடைந் தாலும், அத்தாழ்வினை நல்லோர்கள் தாழ்வாக எண்ண மாட்டார்கள். கெட்டாலும் மேன்மக்களாகவே கருதுவர்.
* ஒழுக்க நெறியில் இருந்து விலகினால் ஒருவன் என்றுமே நீங்காத பெரும்பழியைச் சுமக்க வேண்டி வரும். ஆனால், ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவன் வாழ்வில் என்றும் மிக மேன்மைகளை அடைவான்.
* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்பட்ட உதவி, அளவில் சிறியதாயினும் செய்தவரின் பண்புநலன்களை ஆராய்ந்து பார்த்தால் அவ்வுதவியின் பெருமை கடலைவிடப் பெரியதாக அமையும்.
* இனிமையான சொற்கள் தமக்கும் பிறருக்கும் இன்பம் தரும் என்று தெரிந்திருந்தும், கெடுதலை உண்டாக்கும் கடுஞ் சொற்களை பேசுவோர், என்ன பயன் கருதிப் பேசுகிறார் களோ தெரியவில்லை.
* தன்னிடம் உள்ள உணவு அளவில் சிறிதாக இருந்தாலும், அதனை பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்பதே, அறநூல் கூறும் தர்ம நெறிகளிலே தலைசிறந்த நெறியாகும்

கடும் முயற்சி விதியை வெல்லும்

வானிலிருந்து பெய்யும் மழையே இவ்வுலக மக்களுக்கு வாழ்வளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் மழைநீர் அமுதம் போன்றதாகும். இத்தகைய மழைநீர் இல்லாவிட்டால் பூவுலகில் சிறு பசும்புல்லினைக் கூடப் பார்க்க முடியாது.
நேராக இருக்கும் அம்பு, பிறருக்கு கொடிய காயத்தைத் தரும். வீணை வளைந்திருக்கும். ஆனால் தன்னை மீட்டி மகிழ்பவர்களின் செவிகளுக்கு இனிய இசையை கொடுக்கும். அதனால் ஒருவரது உருவத்தை வைத்து மட்டும் குணத்தைக் கணிக்கக் கூடாது. அவர்களது செயல்களை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
விதி என்று ஒன்று இருக்கிறது. அதை கண்டு சோர்ந்து விடாமல், மாற்றியமைக்க இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். ஆனால், பெயரளவில் முயற்சி இருந்தால் அதனால் பயனேதும் இல்லை. பெருமுயற்சி வேண்டும். அப்படி முயற்சிப்பவன் செய்பவன், விதியையும் வெல்லும் திறம் பெற்றிருப்பான்.
நாம் பேசும் சொற்கள் பொருளுடையதாக இருக்க வேண்டும். பொருளுடைய சொற்களால் பயனுண்டாகும். பயனற்ற வீணான சொற்களைப் பேசுபவன் தன் வாழ்நாளை வீணாக்குபவன் ஆவான். அப்படிப்பட்ட ஒருவனை மக்களுள் பதடி (பயனற்றவன்) என்று தான் அழைக்க வேண்டும்.

நல்லவர்களுடன் சேருங்கள்


தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.


ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.




ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு நல்லவர் சேர்க்கையை விட, வேறு எதுவும் உதவி செய்யாது. அதேபோல், தீயவழியில் ஈடுபட்டு வீணாக வாழ்ந்து துன்பத்தில் வீழ்வதற்கு, தீயவர் சேர்க்கையைவிட வேறு எதுவும் துணையாக இருக்காது.


ஒரு செயலை செய்யும் முன், அதற்கு வரும் இடையூறுகள், விளையும் பயன், தேவையான பொருள், கருவி, காலம், ஆற்றல், இடம் போன்றவற்றை நன்கு சிந்தித்துவிட்டு அதில் இறங்க வேண்டும். இந்த குணங்கள் நல்ல நண்பர்களின் நட்பினாலேயே வரும். செயலை செய்யத் தொடங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம்.

தடம் மாறும் இளம் ரத்தம்!


பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. வளர்ப்பும், சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது.
இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள்.உண்மை தான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு ‘பிளான் பண்ணி’ கொலை   செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்டு, சக மாணவனை கடத்தி பணம் கேட்டதும், கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.
அது, இது என்று எந்த வரையரையும் இல்லாமல் கைதேர்ந்தவர்கள் செய்யும்  எல்லாவிதமான குற்றங்களிலும் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை குழந்தைகள் என்று சொல்லும் அதே சட்டம் தான், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது இளம் குற்றவாளிகள் என்கிறது. அதேநேரத்தில் இவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம். 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராக கருதி, சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
சீர்திருத்த இல்லங்களில் அவர்களின் நிலைமையை  ஆராய்வதற்கு முன்பே சமூகம் ஒதுக்கும் குற்றவாளிகளாக அவர்கள் மாறி விடுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதம்  இளம் குற்றவாளிகள் செய்பவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஒன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம்,தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் நடைபெறுவவை. Ô‘எப்படியிருந்தாலும் அதற்கு சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணம். எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்கு பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும்தான் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ஆர்.மாலினி.
குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். இது சமூக விரோதிகளின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகம் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதே நேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

குடும்பத்தால் குலையும் குழந்தைகள்

குழந்தைகள் மன ஓட்டத்தை ஆராய்ந்து வரும் மனநல நிபுணர்கள் சொல்வதென்ன?
பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும், உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது குடிப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர். பலர், தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதை பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்டக்குறை, விட்டக்குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது. முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல்கள் என்று பட்டம்.
இப்படி கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள். எனவே பிள்ளைகள் யாருடன் பழகினாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி விடும். எனவே குழந்தைகளின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதுடன், நல்வழி காட்டும் கதைகளையும், போதனைகளையும் சொல்லித் தருவது நல்லது. குறிப்பாக தவறான வழியில் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்து சொல்வது மிக முக்கியம். இதற்கு வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பது நல்லது என்கின்றனர்.

குற்றவாளிகளில் பெண்கள்...

தேசிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் சிறுமிகளின் எண்ணிக்கையும் 3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர், சிறுமிகள் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

சிகரெட்
அட்டையில் சீட்டாட்டம்

சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் சீட்டு ஆடினாலே சூதாட்டம் என்று சீறுவது அந்தக் காலம்.  இந்த நாகரீக காலத்தில் சீட்டாட்டம் இன்டோர் கேம் ஆகிவிட்டது. பணக்கார வீடுகளில் மட்டுமல்ல, நடுத்தர குடும்பங்களிலும் சீட்டு விளையாட்டு Ôஜஸ்ட் ஃபன்Õ. அதனால் ஏற்படும் விளைவுகள் சீரியஸானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச் சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர். அவமானத்தில் துடித்த சிறுமி கடைசியில் தூக்கில் தொங்கிளாள். தூண்டிய குற்றத்திற்காக சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வயது 18க்குள். மிக முக்கியான விஷயம், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இளம் குற்றவாளிகள்... இவ்வளவு குற்றங்கள்...

திருட்டுக் குற்றங்களில்தான் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில், மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளன. இன்னொரு அதிர்ச்சி தகவல்... 2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது 141 கொலைகள். அடுத்து மத்திய பிரதேசம். தமிழ்நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள் தான். 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400 சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதர சட்டங்களில்...
ஆயுதங்கள், போதைப் பொருள், சூதாட்டம், சாராயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதனை சட்டமும் கவனிக்கிறது.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்களை விட 2008ம் ஆண்டு குறைவான சம்பவங்களே நடந்துள்ளன. அதாவது 2007ம் ஆண்டில் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2008ம் ஆண்டில் 3156 ஆக குறைந்துள்ளது.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் இளம் குற்றங்கள்

நாகரீகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் விவரம்:

தெருவோரம் உருவாகும்...

இளம் குற்றவாளிகள் பட்டியலில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தான் முதலிடத்தை பிடிக்கின்றனர். தெருவோரத்தில் வசிப்பவர்கள் என்று சொன்னாலும்,  தங்குவது ரயில், பேருந்து நிலையங்களில்தான். வறுமையின் பிடியில் இருப்பவர்கள் முதலில் பிச்சை எடுப்பார்கள். பின்னர் மற்றவர்களுடன் கூட்டு சேருவர்கள். அப்பாவிகளை மிரட்டி காசை பறிப்பார்கள். மறுத்தால் அடி உதையில் இறங்குவர். பிக்பாக்கெட், செயின் பறிப்பு என்று உள்ளூர் திருட்டுகளில் தேறிய பின்னர் இளம் குற்றவாளிகள் பட்டியலில் சேருவர்கள். இல்லாவிட்டாலும் Ôமாசக் கடைசி கேஸ்’ பிடிக்கும் போலீசார் புண்ணியத்தில் கேடிகள் லிஸ்டில் வந்து விடுவார்கள். சமூக விரோதிகள் பழக்க்கம் கிடைத்ததும் இளம் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று பெரும் குற்றவாளிகள் ஆவார்கள். பல சமூக விரோதிகள், சின்ன பையன்கள் என்றால் சந்தேகம் வராது என்பதால், குற்றச் செயல்களிலும், துப்பு கொடுக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சென்னை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் நடக்கிறது.

நேர்மையை வெல்லும் வறுமை

இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளை கவனிக்க நேரமிருப்பதில்லை. எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற நிலை, அவர்களை கண்டும் காணாமல் இருக்க வைத்து விடுகிறது. அதனால் வறுமை அவர்களின் நேர்மையை வென்று விடுகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கை இப்படி பட்டியல் போடுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2008ம் ஆண்டு பதிவுகளின் படி இளம் குற்றவாளிகளில் 62.2 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.25,000 வரை உள்ளவர்கள். அதேபோல் ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை வருமான உள்ள குடும்பங்களை சேர்ந்த இளம் குற்றவாளிகள் 13.6 சதவீதம். எஞ்சிய 24.2 சதவீதத்தினர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவர்கள்.

தமிழகத்தில்...

தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டின் குற்றங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
குற்றம்    2006    2007    2008
கொலை    23    38    26
கொலை முயற்சி    18    17    17        
கற்பழிப்பு    8    13    7
கடத்தல்    0    4    3
பெண் கடத்தல்    0    2    3
வீடு புகுந்து திருட்டு    1    14    3
வழிப்பறித் திருட்டு    6    1    13
கொள்ளை    119    138    106
திருட்டு    304    387    410
ஆட்டோ திருட்டு    44    56    56
வன்முறை    6    26    23
அடிதடி    41    42    158
மானபங்கம்    5    2    5
பாலியல் தொந்தரவு    5    0    0
அலட்சியம் காரணமாக
ஏற்படுத்திய உயிரிழப்பு     78    0    6
மற்ற குற்றங்கள்    29    65    75
மொத்தம்    687    805    911


செக்சிலும்  குற்றம்...

விவரம் அறியாத சிறுவர், சிறுமியர்களை வீட்டில் வைத்துக் கொண்டு பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்கள், உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியத்துடன் அவர்கள் செய்யும் செயல்கள் குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், வளர்இளம் பருவத்திலேயே அது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிகரெட், மது போல் அதையும் முயற்சித்து பார்ப்பதால், குற்றவாளியாக மாறி விடுகின்றனர். அது வெளியில் தெரியவரும் போது இரு தரப்பையும் பாதிக்கிறது. 2008ம் ஆண்டு தகவல் இது. நாட்டில் 30&50 லட்சம் சிறுவர், சிறுமிகள் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.

சொந்தமாக தொழில் துவங்க பயிற்சி: நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் வேல்முருகன்: தோட்டக்கலை சம்பந்தமாக தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தில் கண்டறியப்பட்ட உயர் தொழில்நுட்பங்களை நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் கற்றுக் கொடுக்கிறோம். தாவரவியல் பூங்காக்களை அமைத்தல், அலங்காரத் தோட்டங்களை உருவாக்குதல், அலங்காரச் செடிகள் வளர்த்தல், மாடியில் தோட்டம் அமைத்தல், போன்சாய் மரம் வளர்ப்பு என பல உபயோகமான விஷயங்களை கற்றுக் கொடுக்கிறோம். வீட்டில் உள்ள பெண்களும், வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர். மேலும், தோட்டங்களை உருவாக்குவதற்குத் தேவையான காய்கறி விதைகள், பல தாவரங்களின் விதைகள் ஆகியவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதைகள் அனைத்தும் வேளாண் பல்கலைக் கழகத்திலேயே உருவாக்கப்பட்டவை. தோட்டக்கலை மற்றுமல்ல, மீன் மசாலா, சிக்கன் மசாலா, மிளகாய் பொடி உள்ளிட்ட ஏராளமான சமையல் மசாலா பொடி வகைகளைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கிறோம். மூலிகை செடி விதைகளை எப்படி வளர்ப்பது, அதை வைத்து சமையல் செய்வது உள்ளிட்டவைகளையும் கற்றுக் கொடுக்கிறோம். இல்லத்தரசிகளும் மட்டுமின்றி, வர்த்தக நோக்கில் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும் இங்கு பயிற்சி தரப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் சொந்தமாக பல சிறு தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு பயிற்சியும் தனித்தனியாக, தனித்தனி நாட்களில் அளிக்கப்படுகிறது. மதிய உணவிற்கும் சேர்த்து 400 ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

நிறைய கண்டுபிடிப்பேன்! சிறையில் மொபைல் நடமாட்டத்தை அறிய மொபைல் டிடெக்டர் கருவியை கண்டுபிடித்த மோகன்: கரூரில் தனியார் பாலிடெக்னிக்கில் இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறேன். எங்கள் குடும்பம் சாதாரண நடுத்தர குடும்பம். சிறுவயது முதலே ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதே ஆர்வத்துடனும், விடாமுயற்சியுடனும் நான் கண்டுபிடித்தது தான் மொபைல் டிடெக்டர் சாதனம். இது பொதுவாக தனி நபரின் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும். இதனால், சிறைச்சாலை போன்ற இடங்களில் ஏமாற்றுதல் எளிதாகிவிடுகிறது. நான் கண்டறிந்துள்ள நேவல் மொபைல் டிடெக்டர் சாதனத்தில் ஜி.எஸ்.எம்., சிம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதால் மொபைல் போனைக் கண்டறிந்தவுடன் ஐந்து நபர்களுக்கு அதைப் பற்றிய தகவல் போய்ச் சேர்ந்து விடும். இதன் மூலம் சிறைச்சாலை போன்ற இடங்களில் கடைநிலை ஊழியர் ஏமாற்றினால் கூட குறுந்தகவல் பெறும் ஏதாவது ஓர் அதிகாரி நடவடிக்கை எடுக்க முடியும். பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட இடங்களில் சிம் கார்டு இல்லாமல் வீடியோ, புகைப்படம் எடுக்க மொபைல் போனை எடுத்துச் சென்றாலும் என் கண்டுபிடிப்புக் கருவி அவர்களை காட்டிக் கொடுத்து விடும். மூலிகை மூலம் கொசுக்களை விரட்டும் என் கண்டுபிடிப்பிற்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த 2008ம் ஆண்டிற்கான எல்.ராம்ப் விருதை பெற்றேன். ஸ்பீடு பிரேக்கர் ஜெனரேட்டர் என்ற கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நான் நிரூபித்துள்ளேன். தற்போது, ஜன்னல் கண்ணாடிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி, பள்ளி வாகன ஓட்டுனர்கள் மொபைல் போனை உபயோகித்தால் வாகனம் தன்னிச்சையாக வேகம் குறைந்துநின்று விடும் கருவி ஆகியவை ஆய்வில் உள்ளன. என் சாதனைகளை, கரூர் மாவட்ட கலெக்டர் பல வகைகளில் ஊக்கப்படுத்துகிறார்

இளவயதிலேயே முதுமை தோற்றத்தை தரும் புகையிலை

போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.


புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், நன்மைகள் குறித்து மதுரை மனநல டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், டாக்டர் ரத்தினவேல், உளவியல் நிபுணர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணன் கூறியதாவது :புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும். எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் இருக்கும்.

புகையை கைவிடுவது எளிது :  புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். வீட்டை நறுமண பினாயில் போட்டு சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். நெருக்கமான உறவினர்கள், நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.

புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள் : ரத்தஅழுத்தம், நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வரும். கை, காலில் அபரிமிதமான சூடு உஷ்ணம் குறையும். உடலில் தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு குறையும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நாக்கில் சரியான ருசி தெரியவரும். மாரடைப்பு வாய்ப்பு குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இருவாரங்களுக்கு பின், ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். நடக்கவே சிரமப்பட்டவர்கள், நுரையீரல் விரிவடைந்து பிராண வாய்வு அதிகமாக சென்றுவிடுவதினால் மிக வேகமாக நடக்கவும், ஓடவும் முடியும்.

ஒன்பது மாதங்களுக்கு பின், இருமல், மூக்கடைப்பு குறைந்து சளி வருவது நிற்கும். ஓராண்டிற்கு பின், மாரடைப்பு வருவது பாதியாக குறையும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தஅழுத்தத்தினால் மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிலிருந்து விடுதலை ஏற்படும்.பத்தாண்டுகளுக்கு பின், புற்றுநோயால் இறப்பது பாதியாக குறையும். பதினைந்து ஆண்டுகளுக்கு பின், புகைப்பதை நிச்சயம் விட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களையும் இதைப்போல நடந்துகொள்ளும் வகையில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

மனசெல்லாம் மாயா ! - ஜே.செல்லம் ஜெரினா -

""சாரிடீ... வசு... நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!'' மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது... "மாயா... மாயாவா பேசினாள்... கண் தானம், ரத்ததானம், உடல் தானம்ன்னு கல்லூரியில் முழங்கிய மாயாவா... இப்படி பேசினாள்... ரத்தம் தர முடியாது... அதிலும் உயிர்த்தோழியின் கணவனுக்கு... தோழனுக்கு...'
""மாயா... நீயா... இப்படி பேசுற?'' வசுதாவின் முகத்தில், அதிர்ச்சி அப்பட்டமாக அப்பியிருந்தது...



""ஆமா... ஆமா... வேற விஷயம் இருந்தால் பேசு!''
வசு உறுமினாள்... ""வேற விஷயம் பேசவா... என்னத்தை பேச...? ஷேவாக்குக்கும், தோனிக்கும் நடுவுலே என்னன்னா... இல்ல... சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற போவதேன்னா... கிரண் உனக்கு ப்ரெண்டுன்னா, எனக்கு புருஷன்... அவன் உயிர் ஊசலாடிக் கிடக்குது! நீ... நீ... என்னடி புத்தி கித்தி மாறிப் போச்சா உனக்கு...
""எழுந்து வா மாயா... உன் குரூப்பும், கிரண் குரூப்பும் ஒண்ணுதான்ங்கறது ஞாபகம் வந்ததுமேயே நான் எவ்ளோ நிம்மதியா பீல் பண்ணினேன் தெரியுமா... உன்னைக் கையோட அழைச்சுட்டு போகத்தான் ஓடியாந்தேன்... நீ என்னடான்னா... விளையாடறே... வாடீ...''