Sunday, February 17, 2013

உப்பளத் தொழிலாளர்

உப்பளத் தொழிலாளர் களின் கஷ்டத்தை நீக்க, குறைந்த விலையில் நீர் இறைக்கும், "சோலார் மோட்டார் பம்ப்' தயாரித்த, ஜெயராஜ்: வேதாரண்யத்தில், கடல் நீரைப் பயன்படுத்தி, உப்பு தயாரிப்பதே, முக்கிய தொழில். மின் வெட்டாலும், எரிபொருளுக்கான விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து செல்வதாலும், பெரிய உப்பள உரிமையாளர்கள் மட்டுமே, மின்சாரத்தில் இயங்கும், "மோட்டார் பம்ப் செட்' மற்றும் டீசலில் இயங்கும், "பம்ப் செட்' மூலம், கடல் நீரை இறைப்பர்.வசதியற்றவர்கள்,

Thursday, February 7, 2013

குறை தீர்க்கும்யோகா!



ஒழுங்கற்ற மாதவிடாய் பருவத்தை,"யோகா' மூலம் தீர்க்கும், மேனகா தேசிகாச்சார்: ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட, மேற்கத்திய உணவு கலாசாரமே காரணம். உயரத்திற்கு ஏற்ற எடையை விட கூடுதலாக இருப்பது,

Wednesday, February 6, 2013

உறுதியான பிளாஸ்டிக் சாலைகள்

உறுதியான பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான, தொழில்நுட்பநிபுணர் டாக்டர் ஆர்.வாசுதேவன்:

 மதுரை தியாகராஜர் கல்லூரியில், வேதியல் துறை தலைவராக பணியாற்று கிறேன். ஒரு சாதாரண தார் சாலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் சாலைகள், 10ஆண்டுகள் தாக்கு பிடிக்கும்.

Sunday, February 3, 2013

பட்டத்து யானை


அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும்
சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன்,
தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த
குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத தைப்் போற்றிப் புகழ்ந்தனர். கதை முடிஞ்சுச்சு

Saturday, February 2, 2013

ஜில்லுன்னு ஒரு ஐஸ் கிரீம்!


ஐஸ் கிரீமின் நன்மைகளை விவரிக்கும், விஷ்ணுபிரியா ஸ்ரீகாந்த்: இன்றைய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும், ஐஸ் கிரீமோடு நிறைவு பெறுகின்றன. நாளுக்கு நாள், ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதால், அதை பற்றிய சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகள் ஐஸ் கிரீம் சாப்பிட்டால், பல் சொத்தையாகும், சளி பிடிக்கும்,

Friday, February 1, 2013

இரும்புக் கரம் கொண்ட பெண்!



கணவனுக்கு உதவியாக, இரும்பு பட்டறை தொழில் செய்யும் விஜயலட்சுமி: சொந்த ஊர், நெல்லையின் கல்லிடைக்குறிச்சி. 28 ஆண்டுகளுக்கு முன், பேச்சிமுத்து என்பவருடன் திருமணமாகி, தூத்துக்குடியில், குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கணவர் சொந்தமாக லேத் பட்டறை வைத்து, கிரில் வேலை செய்து வருகிறார். பட்டறையில் இரண்டு,