Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts
Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts

Wednesday, December 9, 2020

புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?, புளி மருத்துவம்

 புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?, புளி மருத்துவம்


பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளிய மரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.
அக்காலங்களில், ஆண்மீகக் கருத்துகளை சொல்லும்போது, உலக விஷயங்களில், 'புளியம் பழமும் ஓடும் போல இருங்கள்!' என்று குறிப்பிடுவார்கள், நன்கு பழுத்த புளியம் பழத்தின் சதை, அதன் ஓட்டில் ஒட்டாது விலகியே இருக்கும், அதுபோல, மனிதர்கள் உலகில் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும், உலக விசயங்களில் பற்றுக்களை விலக்கி வாழ்ந்து, நற்கதி அடையவேண்டும் என்பதே, இந்த சொலவடையின் பொருள்.

பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர். இந்த காலத்தில் அதுபோல யாரும் நடப்பது இல்லையாகையால், வாகனங்களில் செல்வோர் தாக சாந்தி செய்ய, சாலையோரங்களில், தண்ணீர் கடைகளை (!?) திறந்து வைத்து, குடிமக்கள் திருப்தியடைய வழி வகைகள் செய்திருக்கின்றனர்.
புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றன.
எண்பது அடிகள் வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், நூறாண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை, செடியாக நட்டு வளர்ப்பதன் மூலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில், காய்க்கத் தொடங்கிவிடும், வெப்ப மண்டல மரமான புளியமரத்திற்கு ஓரளவு வளர்ந்தபின் தண்ணீர் தேவையில்லை, வேறு எந்த பூச்சிகள் தொல்லையுமில்லை ஆயினும், குளிர் பிரதேசத்தில் மட்டும் இவை வளராது.

புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. அதன் மரம் உறுதிமிக்க மரச்சாமான்கள் செய்ய பயனாகின்றன.
புளிய இலையின் பயன்கள்
சித்த மருத்துவத்தில், புளிய இலை சிறந்த வலி நிவாரணியாக கூறப்படுகிறது.
வலி நிவாரணி :
உடலில் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய, புளிய இலைகளை சூட்டில் வதக்கி ஒரு துணியில் வைத்து, அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து, அதன்பின் வீக்கங்களின் மேல் வதக்கிய புளிய இலைகளை கட்டிவரலாம்.
கால்களில் , கைகளில் தண்ணீர் படும் இடங்களில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது, அந்தக் காயங்களை ஆற்ற, புளிய இலைகள், வேப்பிலைகள் இரண்டையும் நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை காயங்களின் மேல் நன்கு ஊற்றி சுத்தம் செய்ய, அவை விரைவில் ஆறி தழும்பு விட்டுவிடும்.
ரத்தம் சுத்தமாக :
மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படும் விஷ சுரங்கள் விலக, புளிய இலைகளை நன்கு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்து பருகிவர, காய்ச்சல்களின் வீரியம் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
வயிற்றுப் பூச்சிகளுக்கு :
காபிக்கு டிகாக்சன் தயார் செய்யும்போது, சிறிது புளிய இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றி டிகாக்சன் செய்ய, காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த டிகாக்சனில் காபி பருக, குழந்தைகளின் வயிற்று பூச்சிகள் அழிந்து, குழந்தைகள் நன்கு பசியெடுத்து சாப்பிடுவர்.
கொழுந்தான புளிய இலைகளை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிட, உடல் வலுவாகும்.
கண் பாதிப்பு குறைய :
புளிய இலைகளைப்போல, அதன் பூக்களும் நலம் தருபவை, புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கண் சிவப்பு மறைய, புளியம் பூக்களை அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டுவர வேண்டும்.
புளியம் பழம் :
சத்துக்கள் :
நன்கு பழுத்து சதைப் பற்றுடன், சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ள புளியம் காய்களே, வெயிலில் நன்கு காயவைத்தபின், சமையலில் நாம் உபயோகிக்கும் புளியாக கிடைக்கிறது. புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
புளியம் பழத்தின் நன்மைகள் :
புளியின் பொதுவான மருத்துவ குணங்கள், மலச் சிக்கலை சரிசெய்யும், உடல் சூட்டை சீர்செய்து, கண் எரிச்சலை போக்கி, உடலை நலமாக்கும். சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக, புளி விளங்குகிறது. புளி சேர்க்காத சாம்பார், குழம்பு, மற்றும் இரசம் என்பது, தமிழகத்தில் வெகு அரிதான ஒன்று.
வாய்ப்புண் குணமாக :
தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியை சுண்ணாம்பு கலந்து, கடித்த இடத்தில் இட வேண்டும். வாய்ப் புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம்.
அளவுக்கு மீறி மது அருந்தியவர்கள் சிலர், அதிக ஆவேசப்பட்டு, சுற்றியுள்ளவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள், மீதி சிலர், மது போதை தலைக்கேறி, தன்னிலை மறந்து மயங்கிக் கிடப்பர், இந்த மோசமான நிலையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்க, புளியை கரைத்து அந்த நீரை பருக வைக்க, இயல்பு நிலைக்கு திரும்புவர். புளியால் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற பாத்திரங்கள் ஆபரணங்களை, தூய்மை செய்து, பளபளப்பாக்கலாம்,
புளியங் கொட்டை
புளியங் கொட்டையில் அரிசியில் உள்ளது போன்ற மாவுச்சத்தும், ஆல்புமின் எனும் தாதுவும் மற்றும் எண்ணைத் தன்மையும் உள்ளன. புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது இட்டு, பனங்கற்கண்டு கலந்து பருகிவர, உயிர்த்தாது வளமாகும்.
புரதச் சத்துக்கள் :
உடலில் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புளியங் கொட்டைகளை வறுத்தோ வேக வைத்தோ உணவில் விரும்பும் வகையில் சேர்த்துவர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறலாம்.
இரவுகளில் ஏன் தூங்கக் கூடாது :
வெப்பத்தை வெளியிடும் புளியமரம் பகலில் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியேற்ற, அதை சுவாசிக்கும் வழிப் போக்கருக்கும் அதன் நிழலில் இளைப்பாருபவர்களுக்கும், அவை நன்மை தரும்.
அதுவே இரவில், அதிக அளவில் உடலுக்கு தீங்கு செய்யும் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகம் வெளியேற்றுவதால், இரவில் புளிய மரத்தடியில் படுத்து உறங்க, அந்த காற்று சுவாசத்தில் தடை ஏற்படுத்தி, மூச்சடைப்பை ஏற்படுத்தும்,
எனவே தான், இரவில் புளிய மரத்தடியில் உறங்க வேண்டாம், கால்நடைகளையும் இரவில், அம்மரத்தில் கட்டி வைக்க வேண்டாம் என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். அக்காலங்களில் அறிவியல் உண்மைகளை, மக்களை பயமுறுத்தும் வண்ணமே, சொல்லி எச்சரித்தனர், அதனால் தான், அதிக படிப்பறிவில்லாத மக்களும் அதை ஏற்று நடந்து வந்தனர்.

Wednesday, September 23, 2020

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

 "வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:" 

👇👇👇👇 👇 👇


இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,. வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
தேவைக்கு செலவிடு........
அனுபவிக்க தகுந்தன அனுபவி......இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள். Don’t be fooled into buying anything with branded oil.

 தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...

இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.


அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியதும் உங்கள் கடமை!...


சென்ற வாரம் என் நண்பர் ஓமான் நாட்டிற்குச் சென்றார். 


அவர் சென்றது ஒரு எண்ணெய் கம்பெனியின் வியாபாரத் தொடர்புக்கு சென்றவருடன்!.


சென்றவர்கள் அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலை என்று கூட்டிச் சென்றார்கள். 


அவரும் சோஹார் தாண்டி அபுதாபி திசையில் ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.


அவர்கள் கூறிய படியே அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைதான்!


அந்த தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியைக் கேட்ட போது நண்பர் மயக்கம் போடாத குறைதான்!


ஆம்! அந்தத் தொழிற்சாலையில் குரூட் ஆயிலை உபயோகப் படுத்தி ஹெக்சென் கழிவில் ஒரு ஆயிலை தயாரிக்கிறார்கள்.


சரி அதனால் என்ன?.


அது நிறமற்ற, மணமற்ற அடர்த்தி குறைவான ஒரு பொருள்.


மூச்சை இழுத்துப் பிடியுங்கள்... 


இங்கேதான் விஷயம்!


இந்தப் பொருளைத்தான் நாம் தினம் வாங்கும் சூரியகாந்தி எண்ணெய் , ரீபைண்ட் கடலை எண்ணெய் சனோலா எண்ணெய் என்று பெயரிட்டுள்ள அனைத்து பிரபல எண்ணெய்களிலும் 70 சதவீதம் கலக்கிறார்கள்!.


இது அமெரிக்காவின் FDA வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல !.


இந்தியாவில் இது குறித்த எந்த ஸ்டேண்டர்டும் இருப்பதாக கூட தெரியவில்லை!


ஆகவே இது வரை நாம் உபயோகித்து வந்த எண்ணெய் டீசலை விட சற்றே அதிகமாக சுத்திகரிக்கப் பட்ட ஒரு எண்ணெய். அதனால்தானோ என்னவோ கிலோ 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.


இந்தியாவின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சந்தைக்கு விற்று தன்னிறைவை எட்டுமா?!.


அது பற்றி இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை நோக்கிய போது அது 25%-30% வரையே உற்பத்தி நடக்குறது எனும் உண்மையும் தெரிந்தது.


பால்ம் ஆயில் என சொல்லி இந்த கழிவுகளை இறக்குமதி செய்து கலக்கின்றனர்.


ஆகவே எண்ணை வியாபாரிகள் இந்த குரூட் எண்ணையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லாமல் புத்தியை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள்.


எண்ணெய் சந்தை. தமிழகத்தில் எண்ணெய் சந்தை மதிப்பு ரூ 4100 கோடி ரூபாய்.


பெட்ரோலிய எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்யம் பற்றி பேசி என்ன பயன்..?


எனவே.... தயவு செய்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!


 நமது சந்ததிகளைக் காக்க இதுவே கடைசி தருணம்!.🚸


உண்மையான செக்கு எண்ணெய் விலை அதிகம் என்றாலும் அதையே உபயோகியுங்கள்.


உண்மையான விவசாயிகளை வாழ வைத்த புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கும்!.


பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள்.


⚠ டிவியை பார்த்து நம்பி வாங்கியது இனி போதும்...?⚠


அதே போன்று வெள்ளைச்  சர்க்கரை என்ற எமணையும் வீட்டிற்குள்ளேயே விட வேண்டாம். நாட்டுச் சர்க்கரைக்கு மாறிடுவோம்.

🍃🌾🍃🌾🍃🌾 

🌾🍃🌾🍃🌾🍃🌾🍃


(படித்ததில் அவசியம் என்று எனக்கு  தோனுச்சு)

Wednesday, May 7, 2014

அசல் தேன் எது? கலப்பட தேன் எது?



அசல் தேன் எது? கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் கண்டறியலாம்.


1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை,
தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும் மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்ப...தை அறியலாம்.
ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

Tuesday, May 6, 2014

வலது காலை எடுத்து வைத்து வா

Monday, November 8, 2010

புதுமைக்குத் தேவை சவால்

நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை, எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர் ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப் போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!
டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார். அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது! ‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக்கொள்வதால் நன்மைகள் ஏராளம்; இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.
இந்த ஒரு சவால் மட்டுமே - ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுகடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது. அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது, மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள். விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்! உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா? பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.
இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது நிறுவனமும் ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல “சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பனபோல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.
போகிற பாதை மிகவும் பயங்கரமானது! அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும். புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை, ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்; அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும், சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின் நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல;  இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்! 
சிகரத்தை அடைவோம்! வானத்தைத் தொடுவோம்!!
நன்றி : http://ceoblog.kapsystem.com/

Monday, November 1, 2010

ராக்பெல்லர்

I do not think that there is any other quality so essential to success of any kind as the quality of perseverance. It overcomes almost everything, even nature.


 
அமெரிக்காவில் ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தார் ராக்பெல்லர். வறுமையான சூழலில் தொடர்ந்து படிக்க விரும்பமின்றி, தன் 16வது வயதில் ஒரு கமிஷன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து இரண்டு வருடம் கடுமையாக உழைத்தும் சம்பளம் உயரவில்லை. எனவே, ஒரு நண்பருடன் சேர்ந்து தனியே கமிஷன் வியபாரம் தொடங்கினார். ஓஹோவென வியபாரம்
நடந்துகொண்டு இருந்தபோதுதான், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எதிர்காலத்தில் எண்ணெய் வியபாரம்தான் பெருகும் வளர்ச்சியடையும் என துல்லியமாகக் கணித்த ராக்ஃபெல்லர், 1863ம் வருடம் அந்தத் தொழிலில் இறங்கினார். “உனக்குப் பணம் சம்பாதிப்பதற்கு ஏன் இவ்வளது ஆசை?” என்று நண்பர்கள் கேட்ட போது, “பணம் சம்பாதிப்பதைவிட, தொழிலில் முதல்வனாக இருக்கவே விரும்புகிறேன். சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை;  எனக்குக் கிடைக்கும் வெற்றியில் தான் இருக்கிறது!” என்றார். சொன்னது போலவே, தொழிலில் முதல்வனாக இருந்து மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து, 1910 முதல் 1937 வரை உலகின் பெரும் பணக்காரராகத் திகழ்ந்தார்.
முதல் 50 வருடங்களில் சம்பாதித்த பணத்தை அடுத்து வாழ்ந்த 48 வருடங்களில் நல்ல வழிகளில் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். மருத்துவ ஆராய்ச்சிக்கென ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், மருத்துவ சேவைக்கென ராக்ஃபெல்லர் பவுண்டேசன் எனப் பல்பேறு சேவை நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்காவின் முன்னனேற்றத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.
தான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகச் சம்பாதித்து வெற்றி கண்ட ராக்ஃபெல்லர், 100வயது வரை வாழ வேண்டும் என்கிற தனது ஆசை மட்டும் நிறைவேறாமல், 98 வயதில் மரணம் அடைந்தார்.


John D. Rockefeller needed neither a trust fund nor the example of a successful father to become the richest man in American history. His dad was a salesman who was rarely at home as young John grew up. Rockefeller was left to forge his own path. As a young man, he took a job as an assistant bookkeeper, saved his dough, and then partnered with others in buying a couple of oil refineries in Cleveland. In 1870, Rockefeller incorporated his holdings into Standard Oil.
Rockefeller’s business plan was simple; by obsessively increasing the efficiency of his refineries and pressuring railroad companies for discounted shipping, he successfully undercut and then bought out the competition. It was said he had the “soul of a bookkeeper,” and he loved to pour over his figures and see where waste could be eliminated. Utilizing both vertical and horizontal integration, Rockefeller soon owned nearly every aspect of the oil business and controlled 90% of the kerosene market. Such success netted Rockefeller great wealth; when he retired he was estimated to have accumulated a $1,500,000,000 fortune. Having won this wealth through his own toil, he didn’t just sit on this money. He donated much of it in hopes of providing others with similar opportunities for success.