Showing posts with label சொல்கிறார்கள். Show all posts
Showing posts with label சொல்கிறார்கள். Show all posts

Sunday, February 17, 2013

உப்பளத் தொழிலாளர்

உப்பளத் தொழிலாளர் களின் கஷ்டத்தை நீக்க, குறைந்த விலையில் நீர் இறைக்கும், "சோலார் மோட்டார் பம்ப்' தயாரித்த, ஜெயராஜ்: வேதாரண்யத்தில், கடல் நீரைப் பயன்படுத்தி, உப்பு தயாரிப்பதே, முக்கிய தொழில். மின் வெட்டாலும், எரிபொருளுக்கான விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து செல்வதாலும், பெரிய உப்பள உரிமையாளர்கள் மட்டுமே, மின்சாரத்தில் இயங்கும், "மோட்டார் பம்ப் செட்' மற்றும் டீசலில் இயங்கும், "பம்ப் செட்' மூலம், கடல் நீரை இறைப்பர்.வசதியற்றவர்கள்,

Thursday, February 7, 2013

குறை தீர்க்கும்யோகா!



ஒழுங்கற்ற மாதவிடாய் பருவத்தை,"யோகா' மூலம் தீர்க்கும், மேனகா தேசிகாச்சார்: ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட, மேற்கத்திய உணவு கலாசாரமே காரணம். உயரத்திற்கு ஏற்ற எடையை விட கூடுதலாக இருப்பது,

Wednesday, February 6, 2013

உறுதியான பிளாஸ்டிக் சாலைகள்

உறுதியான பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான, தொழில்நுட்பநிபுணர் டாக்டர் ஆர்.வாசுதேவன்:

 மதுரை தியாகராஜர் கல்லூரியில், வேதியல் துறை தலைவராக பணியாற்று கிறேன். ஒரு சாதாரண தார் சாலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் சாலைகள், 10ஆண்டுகள் தாக்கு பிடிக்கும்.

Saturday, February 2, 2013

ஜில்லுன்னு ஒரு ஐஸ் கிரீம்!


ஐஸ் கிரீமின் நன்மைகளை விவரிக்கும், விஷ்ணுபிரியா ஸ்ரீகாந்த்: இன்றைய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும், ஐஸ் கிரீமோடு நிறைவு பெறுகின்றன. நாளுக்கு நாள், ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதால், அதை பற்றிய சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகள் ஐஸ் கிரீம் சாப்பிட்டால், பல் சொத்தையாகும், சளி பிடிக்கும்,

Friday, February 1, 2013

இரும்புக் கரம் கொண்ட பெண்!



கணவனுக்கு உதவியாக, இரும்பு பட்டறை தொழில் செய்யும் விஜயலட்சுமி: சொந்த ஊர், நெல்லையின் கல்லிடைக்குறிச்சி. 28 ஆண்டுகளுக்கு முன், பேச்சிமுத்து என்பவருடன் திருமணமாகி, தூத்துக்குடியில், குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கணவர் சொந்தமாக லேத் பட்டறை வைத்து, கிரில் வேலை செய்து வருகிறார். பட்டறையில் இரண்டு,

Thursday, January 31, 2013

பசுமைப் புரட்சி செய்யலாம்!


புதிய நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்திய, ஓய்வு பெற்ற பொறியாளர் பெரியண்ணன்: நான், சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி கிராமத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர்.

Wednesday, January 30, 2013

என் முயற்சியை பரீட்சை செய்தேன்



ஒருவரே நடித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கிய, "ஒன்' ஆங்கில படத்தின், "ஒன் மேன்' ஹீரோ ராஜ்குமார்: சங்ககிரியின் நெடும்பாறைக்காடு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். ஓய்வு நேரங்களில் தாத்தா தெருக்கூத்தும், அப்பா மேடை நாடகமும் நடத்தி வந்தனர். கலைப் பாரம்பரியம் விட்டுப் போகாமல், ஓய்வு நேரங்களில், சினிமா எடுக்க முயற்சித்தேன். விவசாயத்தில் வரும் பணத்தில், ஒரு முழு படச் செலவை சரிக்கட்ட முடியாது. எனவே, தொழில்முறை கலைஞர்களை தவிர்த்து, சொந்த ஊரில் வசிப்பவர்களையே நடிக்க வைத்து, "வெங்காயம்' என்ற திரைப்படம் எடுத்தேன். பேர் சொல்லும் படமாக இருந்தாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. 

என்னை மட்டுமே வைத்து, "ஒன்" என்ற ஆங்கில படமெடுக்க, முக்கிய காரணம் பணம். இருந்தாலும், என் அதிகபட்ச தனிமனித முயற்சியை, பரீட்சித்துப் பார்த்து விட ஆசை. சினிமா என்பது இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, அலுவலக பணி, லைட் மேன் ஒர்க் என, அனைவரது கூட்டு முயற்சியால் ஆனது. என்னை மட்டுமே வைத்து, அனைத்து சினிமா வேலைகளிலும், அதிகபட்ச தனிமனித முயற்சியை காட்டினேன். ஒளிப்பதிவு முதல் அலுவலக பணி வரை, அனைத்தையும் செய்தேன். ஒரே ஆள் இத்தனை சுமைகளை தாங்கி, ஏன் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. 

படத்தில் வரும் பெண்கள் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களும் நானே நடித்தவை. வணிக ரீதியிலான, அத்தனை, "கலர்புல்' அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, 500 பேர் திரையரங்கில் படம் பார்க்கும் காட்சியில், 500 பேராக நானே நடித்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்கும், மற்றொரு பாத்திரத்திற்கும், லேசான முகச் சாயல் இருக்குமே தவிர, வேறெந்த ஒற்றுமையும் இருக்காது. ஜாக்கிசான், "சைனீஸ் ஸோடியாக்' படத்தில், 15 துறைகளில் ஈடுபட்டார், என்பதே உலக சாதனை. ஆனால், நான் மட்டுமே அனைத்து துறைகளுக்கான வேலை செய்து, எப்படி, "ஒன்' என்ற ஆங்கில படத்தை, தயாரித்து எடுத்தேன் என்பதையும், கேமராவில் பதிவு செய்திருக்கிறேன்.

Tuesday, January 29, 2013

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறீர்களா?



மன நல மருத்துவர் பாரதி விஸ்வேஸ்வரன்: ஓ.சி.டி., எனப்பதும், "அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' என்ற நோய் குறித்து, யாருக்கும் தெரிவதில்லை. அர்த்தமில்லாத சிந்தனைகள், மீண்டும் மீண்டும் தோன்றுவது தான் இதற்கு காரணம். இதில், நான்கு வகை உண்டு. அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் தொந்தரவு செய்தால், அளவுக்கதிகமாக, சுத்தத்தை எதிர்பார்ப்பர். அடிக்கடி குளிப்பது, பொருட்களை பலமுறை கழுவி வைப்பது, பல முறை கை கழுவுவது போன்றவற்றில், அடிக்கடி ஈடுபடுவர். இரண்டாவது, சந்தேகத்தால் வரக் கூடிய குழப்பம்.

Friday, June 17, 2011

சாதனை: படிப்புதான் உயிர்...வாழ்க்கை... உலகம்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இரவுப் பணிக்கு மட்டுமே போய்க் கொண்டு இருக்கிறார். எதற்காக என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். தன்னுடைய இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக.

Thursday, March 31, 2011

"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'

http://img.dinamalar.com/data/large/large_215742.jpg
"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'சாலையோர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும் வெளிநாட்டு பெண் இவனா: என் சொந்த நாடு செர்பியா. கடந்த ஆறு வருடங்களாக, பல நாடுகளுக்கு பயணம் செய்து சமூக சேவை செய்து வருகிறேன்.

Wednesday, March 30, 2011

http://img.dinamalar.com/data/large/large_215062.jpg
"வேலையை காதலுடன்செய்கிறேன்!' அமெரிக்க கடற்படை போர்க் கப்பலின் கமாண்டர் சாந்தி சேத்தி: அம்மா, அப்பாவின் பூர்வீகம் டில்லி. உறவினர்களைப் பார்க்க, சிறு வயதில் டில்லி சென்றிருந்தாலும்,

Tuesday, March 22, 2011

திறந்த மனதுடன் செல்லுங்கள்

http://img.dinamalar.com/data/large/large_209999.jpg
திறந்த மனதுடன் செல்லுங்கள்: கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் 36வது இடம் பெற்ற சண்முகப்பிரியா: ஐ.ஏ.எஸ்., எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்முகத் தேர்வு முக்கியமான ஒன்று. நேர்முகத் தேர்வுக்கு

Friday, March 18, 2011

"நம்பிக்கை வீண் போகவில்லை!'

http://img.dinamalar.com/data/large/large_207538.jpg
"நம்பிக்கை வீண் போகவில்லை!' கார்மென்ட்ஸ் தொழிலில் அசத்தும் லோகநாயகி: தஞ்சாவூர் தான் சொந்த ஊர். அப்பா, டூவீலர் மெக்கானிக். உடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. பத்திரிகையாளர் ஆக வேண்டும்

Friday, March 11, 2011

"நடனம் எனக்கு கிடைத்த தூண்!'

http://img.dinamalar.com/data/large/large_203235.jpg
"நடனம் எனக்கு கிடைத்த தூண்!' நடன உலகில் சர்வதேச அளவில் பல மேடைகளைக் கண்ட, சிகாகோவில் வாழும் இந்தியரான மாற்றுத் திறனாளி சுடிக்ஷ்னா: எங்கம்மா, அமெரிக்கா, சிகாகோ நகரத்துல, "பரதம்'னு நாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. அப்பா, மிருதங்க வித்வான். தங்கை, 6ம் வகுப்பு படிக்கிறாள். நான், பிளஸ் 1 படிக்கிறேன். பிறவியிலேயே எனக்கு,

Thursday, March 10, 2011

சட்டமும் கை கொடுக்கும்!


"சட்டமும் கை கொடுக்கும்!' அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார்: மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான

Wednesday, March 9, 2011

"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!'

 http://img.dinamalar.com/data/large/large_201878.jpg
"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!' கார்டூனிஸ்ட் பாலா: எனது பூர்வீகம் நெல்லை. நான் பிறந்தது, வளர்ந்தது ஆரம்ப கல்வியை முடித்தது மும்பையில்தான். தாத்தா பொன்னையாவுக்கு உதவியாக நெல்லை வந்தேன். அவர் ரொம்ப வித்தியாசமான பர்சனாலிட்டி. அவர் மேற்பார்வையில்

Tuesday, February 22, 2011

ஸ்டெம் செல்லால் மூளை பிரச்னைக்கு தீர்வு!

http://img.dinamalar.com/data/large/large_192553.jpg
பல் மருத்துவர் ரங்கநாதன்: "ஸ்டெம் செல்' ஆராய்ச்சி தற்போது, உலகம் முழுவதும் முழு வீச்சில் நடக்கிறது. பல்லில் உள்ள, "ஸ்டெம் செல்'லை எடுத்து, மூளை தொடர்பான நோய்கள், முதுகுத் தண்டு பிரச்னைகளை குணப்படுத்த முடியும். தற்போது, நவீன மருத்துவத்தில், "ஸ்டெம் செல்'

Sunday, February 20, 2011

வாழும் வரை நல்லது செய்ய வேண்டும்

http://img.dinamalar.com/data/large/large_191220.jpg
"வாழும் வரை நல்லது செய்ய வேண்டும்!' ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராசிகேசவன்: அறிவியல் பட்டதாரியான நான், தூத்துக்குடியில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் கம்பெனியில், பிளான்ட் மேலாளராக பணியாற்றினேன். ஆக்சிஜன்

Saturday, February 19, 2011

வாழ்க்கையை வளமாக்கும் படிப்புகள்...

http://img.dinamalar.com/data/large/large_190595.jpg
"நாக்ரி.காம்' இணையதளத்தின் செயல் இயக்குனர் சுரேஷ்: சர்வதேச மற்றும் இந்திய அளவில் உள்ள பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில், பல துறைகளில், அதிக அளவு திறமையான மனித வளம் தேவைப்படுகிறது. அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பது, உள்கட்டுமானத் துறை. இதில், ரயில்வே, எரிபொருள் துறையான ஆயில் மற்றும் காஸ், ஏர்போர்ட், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில், தேவை அதிகம் இருக்கும். சிவில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற பொறியியல் படிப்புகளையும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பையும் முடிப்பவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். அடுத்த இடத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை; இந்த துறையுடன் தொடர்புடைய கே.பீ.ஓ., - பி.பீ.ஓ., - ஐ.டி.இ.எஸ்., ஆகியவற்றில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் படிப்பவர்களில், ஆங்கிலம் பேசும் திறமை கொண்டவர்களுக்கும் வேலை நிச்சயம். அடுத்து பயோடெக்னாலஜி; இத்துறையில், முன்னணி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்து கொண்டிருப்பது, வளர்ச்சிக்கான ஆதாரம். வேதியியல், உயிர்வேதியியல், நுண் உயிரியல் படிப்பவர்கள், தயக்கமில்லாமல் இதில் சேரலாம். நான்காம் இடத்தில் இருக்கும் படிப்பு, பேஷன் டிசைனிங்; கடந்த 15 ஆண்டுகளில், எல்லா வயதினருக்கும், ஆடைகள் மீதான ரசனை அதீதமாக வளர்ந்துள்ளது. பேஷன் சம்பந்தப்பட்ட அனைத்து படிப்புகளும், நல்ல வருவாயை ஈட்டித் தரும். வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டும் இல்லாது, அதில் டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், கடினமாக உழைத்தால், அடுத்த கட்டத்திற்கு விரைவாக முன்னேற முடியும்

Friday, February 18, 2011

ஆசிரியர் நினைத்தால் அனைத்தையும் மாற்றலாம்!

 http://img.dinamalar.com/data/large/large_189994.jpg
ஊரை மாற்றிய டீச்சர் ராஜம் கோவிந்தராஜன்: நான் பிறந்து வளர்ந்த இடம், தஞ்சை மாவட்டம். ஊர் மிராசுதாரரா இருந்த என் அப்பாவும், நான் படிச்ச பெண்கள் கிறிஸ்டியன் மேல் நிலைப்பள்ளியும் தான் என் அடித்தளம். பத்தாம் வகுப்பு முடித்த பின், செகன்ட் கிரேடு டீச்சருக்குப் படிச்சேன். என் திருமணத்திற்குப் பின் தான், திருவாரூர் அருகில் உள்ள திருமதி குன்னத்திற்கு வந்தேன். நகரத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால், ஆரம்பத்தில், இந்த கிராமம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. மாணவர்களிடம் ஒழுக்கம், சுத்தம் எதுவும் இருக்காது. அப்பதான், ஒரு டீச்சராக, மாணவர்களின்