Thursday, November 1, 2012

வருந்தாத மாக்கள்


வருந்தாத மாக்கள் :
--------------------------------


கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்

- வை . நடராஜன்

Wednesday, May 9, 2012

கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!

Grow Your Hair With The Help Siddha

கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

இயற்கை மருத்துவம்

ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி கருப்பாக வளர

உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்


Thursday, February 2, 2012

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி


Chicken Fryசெட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். 

சத்தான இறால் தொக்கு


Iral Thokkuகடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானதும் அதீத நல்ல கொழுப்புச் சத்துக்களும் இறாலில் உள்ளன. மேலும், கால்சியம், புரதம், அயோடின் போன்ற சத்துக்களும் இறாலில் உள்ளதால் இதனை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி12, டி போன்றவையும், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் போன்றவையும் இறாலில் காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு


Ayirai meen kulambuமீன் குழம்பு என்றாலே நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும் அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார் செய்யப்படுகிறது.

தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்


Dandruffகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம்

Tuesday, January 31, 2012

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

Nandita Das
சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும் சமாச்சாரம். கறுப்பானவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என்பது அழகுக்கலை நிபுணர்கள் களின் நம்பிக்கை வார்த்தையாகும்.

சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் மட்டுமல்ல, கேன்சரும் வருமாம்!


Sareeதினமும் சேலை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் என்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் செயிதி வெளியிட்டுள்ளது.

அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!


நம்மில் பலர் முகத்தை அழகாக்குவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதைப்போல உடல் உறுப்புகள் பலவற்றினை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் தெரியும்.
Nail Care
நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகத்தினை பாதுகாப்பது குறித்து அழகியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் உங்களுக்காக.

தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே 'சூப்பர் எபெக்ட்'!


Fertilityஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காதல் வந்தால் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கும்–விஞ்ஞான உண்மை


Loversலட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடிவேலு சொல்றதைப் போல, உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
 
காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். 

Saturday, January 28, 2012

முகமூடி



தொடர் ஹாரன் சத்தம் கேட்கும்
டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம்
புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது

முட்டை தோசை
குஷ்பூ இட்லி
இட்லி போடும் குண்டு பெண்

பேக்கிரி உனக்கு
உங்கக்கா எனக்கு

அய்யோ..
ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?

உள்ளே போனது நெப்போலியன்
வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர்

பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு
வேறொருவனோடு ஓடிப் போன காதலி

போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா?

புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன்
அடுத்த நாள் ”காலை” தயாராய் இருந்தது
சலவை செய்த முகமூடியோடு.

- கேபிள் சங்கர்

Friday, January 27, 2012

பிரிவிற்குப் பின்

பிரிவிற்குப் பின்
உன்
வருகைக்காகக்
காத்திருக்கையில்
ஒரு கண்ணீர்த்துளியும்
ஒரு புன்னகையும்
காத்திருக்கின்றன.
மறைத்துவைக்கும்
யதார்த்த
யத்தனிப்பில் நான்.

அன்புசிவன் (ப.சிவகுமார்)
27.01.2012 / 07,50 காலை

Tuesday, January 24, 2012

காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள்

உனக்கான
காத்திருப்பில்
உருவாகாத
உனது தேநீரும்
உறிஞ்சப்பட்டிக்கொண்டிருக்கும்
எனது தேநீரும்
உள்ளுக்குள்ளேயே
ஓடும்
வார்தைகளும்
அடங்கும்.

எதைச் சொல்ல?


எதைச் சொல்ல?


எதைச்சொல்ல நினைத்தாய் 


ஏன் எதையும் சொல்லாமலேயே இருந்தாய் 


கடைசிச் சந்திப்பின் மௌனமா


முற்றுப்பெற்றுக் கொண்டிருந்தொரு நட்பின் 


முடிவுரையா


நீ


விட்டுச்சென்ற குறிப்பேடு


விரிக்கப்படாமலேயே கிடக்கிறது


சொல்லாமல்


விட்டுச்சென்ற வார்த்தைகள்


விழுந்துவிடலாமென்ற பயத்தோடு.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்


Tender Coconutகர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர்

உடல் எடை குறையனுமா? மனசால நினைக்கனுங்க….!


Weight Loss Tipsமாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

Monday, January 23, 2012

ஈமெயில் அழியப் போகிறதா?


புறா.. கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து?

மின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாக தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.

Email

துவக்கத்தில் மின்னஞ்சல் என்றால் அனைவருக்கும் தெரிந்தது ஹாட்மெயில் தான். முதலில்

Friday, January 6, 2012

எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த 'சி' முக்கியம்!


Orange

ஓடியாடி அலையும் உடலுக்கு சத்தான உணவுகள் அவசியம். அந்த உணவுகளில் இயற்கையாகவே எண்ணற்ற உயிர்சத்துக்களும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ளன. உடலின் வளர்ச்சிக்கும், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் உயிர்ச்சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள் அவசியம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில்...