Tuesday, March 25, 2014

நம்பிக்கை


இரவு நேரம். ஒருவன் மலைப் பாதையின் ஓரத்தில்


நடந்து போய்க் கொண்டு இருந்தான். திடீர் என
கால் சறுக்கிக் கீழே விழுந்தான். ஒரு மரக்
கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

“”கடவுளே என்னைக் காப்பாற்று”

கடவுள் சொன்னார்: “”மரத்தின் கிளையிலிருந்து
உன் கைகளை விட்டுவிடு”

அவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை வரவில்லை.
இரவு முழுக்க மரக்கிளையில் தொங்கிக்
கொண்டிருந்தான், கடுமையான கை வலியையும்
தாங்கிக் கொண்டு.

விடிந்தது.

கீழே- பார்த்தான்.

தரை ஓர் அடி தூரத்தில் இருந்தது.!!??