Wednesday, September 23, 2020

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

 "வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:" 

👇👇👇👇 👇 👇


இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,. வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
தேவைக்கு செலவிடு........
அனுபவிக்க தகுந்தன அனுபவி......இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்

 கோவை போகும் வழியில், 
மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன், 

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய், 

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,  நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. 

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை. 

இது போன்ற எளிய மனிதர்களை கண்டால்,  இயன்றதை தருவது, என் வழக்கம்.


அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர், 


மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.            


ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.


ஏன் எனக் கேட்டேன்.அவங்க கொடுத்திட்டாங்க.. 

" யாரு " 

 திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார். நிச்சயமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும், 

உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது... 

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன். " பேரென்னங்க ஐயா " "முருகேசனுங்க " 


" ஊருல என்ன வேல "

" விவசாயமுங்க "


" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "


" நாலு வருசமா செய்றேங்க "


" ஏன் விவசாயத்த விட்டீங்க "


மெல்ல மௌனமானார். 


தொண்டை 

அடைத்த துக்கத்தை,                          

மெல்ல மெல்ல முழுங்கினார். 


கம்மிய குரலோட பேச துவங்கினார். 


ஆனால், 

என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும், 


அவரின் முழு கவனமும், சாலையில் 

செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே

இருந்தது.


" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க, 


ஒரு பொண்ணு, 

ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு. 


ஆனா,

மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். 


நானும் முடிஞ்சவரை கடன,

உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், 


ஒண்ணுமே விளங்கலே, 


கடைசிவரை

கடவுளும் கண்ணே தொறக்கலை.


இதுக்கு மேல தாளாதுன்னு, 


இருக்கிற நிலத்த வித்து, 

கடனெல்லாம் அடைச்சுட்டு, 


மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா

பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.


பையன் இருக்கானே, 

அவனைப் படிக்க வைக்கணுமே, 


அதுக்காக, 

நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன். 


மூணு வேளை சாப்பாடு. 

தங்க இடம், 

மாசம் 7500/- ரூபா சம்பளம். 


இந்த வேலைய பாத்துகிட்டே,

பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன். 


படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், 

பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.


அப்படியா, 

உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர். 


சரி,

அதான் பையன் வேலைக்கு போறான்ல, 


நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,


நிச்சயமா

போவேன் சார், 


பையனே 

"நீ கஷ்டப்

பட்டது போதும்ப்பா, 

வந்துடு, 

எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், 


ஆனா,

இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, 


அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "


" எப்போ "


" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் 

சார் "


" சரி, 

கடவுள் இருக்கார் பெரியவரே, 


இனி எல்லாமே நல்லதாவே 

நடக்கும் ".


பெரியவர் 

சிரித்தார். 


நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, 


ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான், 


பெரியவர் முகம் மலர்ந்தார். 


" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்

காங்க" என்றார்.


"என்ன 

சொன்னீங்க சார். 


கடவுளா !!!


கடவுள் என்ன சார் கடவுளு, 


அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார். 


இல்லன்னா, 

ஊருக்கே சோறு போட்ட என்னைய, 

கடனாளியாக்கி 


இப்பிடி நடு ரோட்டுல நின்னு, 


சாப்பிட 

வாங்கன்னு 

கூப்பிட வைப்பானா,


" மனுஷங்க 

தான் 

ஸார் கடவுள் "

 

முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, 


நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, 


இதோ இந்த  வயசானவனுக்கு கால்

வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, 

என் முதலாளி ஒரு கடவுள், 


"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்

படனும், 

பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, 


கூழோ, 

கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, 

எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, 

என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.


கஷ்டப் பட்டு 

அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, 


" நீ வேலைக்கு போவாதப்பா,

எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன

 என் புள்ள 

ஒரு கடவுள்


நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,

எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள். 


இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி

அப்பப்ப ஆதரவா பேசுற, 

உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள். 


" மனுசங்க தான் 

சார் கடவுள் "


எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே

தோன்றியது, 


இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.


வேண்டாமென மறுத்த போதும், 


பாக்கெட்டில் பல வந்தமாய் 

பணம் திணித்தேன். 


பஸ் கிளம்பும் 

போது, 

மெல்ல புன்னகைத்த, 


முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,


தலை வணங்கியே, கும்பிட்டேன்.


ஒவ்வொரு வீட்டுக்குமே,

இது போன்ற தகப்பன் சாமிகள்,

நிறைய பேர் இருக்கத்தான்

செய்கிறார்கள். 


நமக்குத்

தான் எப்போதுமே

கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை,


 🙏🏻💓உறவுகளுக்கு🌹🙌🌹 வணக்கம்.

Happy Birthday #Ramanathapuram இராமநாதபுரம் பிறந்தநாள்

 வரலாற்றில் இன்று #இராமநாதபுரம் பிறந்தநாள் 


Happy Birthday #Ramanathapuram


1910 ஆம் ஆண்டில் இதேநாளில் தான் மதுரை - திருநெல்வேலி மாவட்டங்களின் சிலபகுதிகளை ஒன்றினைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது 


இம்மாவட்டத்தின் தலைநகராக மதுரையே இருந்தது பின்பு நிர்வாக வசதிக்காக 1985 ஆம் ஆண்டு தலைநகர் இராமநாதபுரத்திர்க்கு மாற்றப்பட்டு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன 


இம்மாவட்டத்தில் உள்ள #வட்டங்கள் 


இராமநாதபுரம் ,பரமக்குடி, முதுகுளத்தூர் ,கடலாடி,கமுதி இராமேஸ்வரம் ,திருவாடானை 

கீழக்கரை ,ராஜசிங்கமங்களம்  என 09 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது 


#நகராட்சிகள் 


இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி


பரமக்குடி (முதல் நிலை நகராட்சி)


 இராமேஸ்வரம் (இரண்டாம் நிலை நகராட்சி ) 


 கீழக்கரை மூன்றாம் நிலை நகராட்சி என நான்கு நகராட்சிகள் உள்ளன 


#பேரூராட்சிகள் 


முதுகுளத்தூர் , கமுதி,  சாயல்குடி ,மண்டபம் ,தொண்டி, ஆர்.எஸ்.மங்களம், அபிராமம் 


#ஊராட்சிகள் 


இராமநாதபுரம் மாவட்டம் 429 ஊராட்சிகளை கொண்டுள்ளது 


#ஒன்றியங்கள் 


முதுகுளத்தூர், போகலூர், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி , நயினார் கோவில் 


#கல்வி மாவட்டங்கள் 


* இராமநாதபுரம் 


* பரமக்குடி 


* மண்டபம் 


#வருவாய் மாவட்டங்கள் 


இராமநாதபுரம்  பரமக்குடி 


#சுற்றுலா ஸ்தலங்கள் 


இராமநாதபுரம் அரன்மனை , தனுஷ்கோடி, பாம்பன் பாலம், தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி தர்ஹா, திருப்புல்லாணி, சேதுக்கரை, அப்துல்கலாம் நினைவிடம், ஓரியூர் சர்ச், வாலிநோக்கம் கடற்கரை, அரியமான் பீச், காரங்காடு சூழல் சுற்றுலா, மரபனு பூங்கா, பாம்பன் குந்துக்கால் மண்டபம், மன்னார் வளைகுடா தீவுகள் , கமுதி கோட்டை போன்றவை ஆகும் 


#சாலைகட்டமைப்பு 


மதுரை - தனுஷ்கோடி NH 87

இராமநாதபுரம்  - திருச்சி NH 536 

சென்னை - கன்னியாகுமரி SH 49 

தொண்டி - மதுரை NH 85 

சாயல்குடி - தஞ்சாவூர் SH 29 

இராமநாதபுரம் - மேலூர் SH 34 

சாயல்குடி - அருப்புக்கோட்டை SH 38 

பார்த்திபனூர் - கமுதி  SH 47 


#ரயில்நிலையங்கள் 


* இராமேஸ்வரம் 

* பாம்பன் 

* மண்டபம் 

* உச்சிப்புளி 

* வாலந்தாரவை

* இராமநாதபுரம் 

* சத்திரக்குடி 

*பரமக்குடி 

*சூடியூர்

NRC. சொல்வது என்ன

 பொறுமையாக படியுங்கள்;

#அவசியம் #பகிருங்கள்...


CAA(CAB) & NRC ...


முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...


NRC. சொல்வது என்ன ...


"Simply being born in India or having parents who were born in India is not enough ...The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 ..."


புரிகின்றதா வில்லங்கம் ...


நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...


நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!


பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...


ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...


சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...


LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...


LIST -A ...


1.Electoral rolls upto March 25,1971

2.NRC of 1951

3.Land and Tenancy Records

4.Citizenship certificate

5.Permanent resident certificate

6.Passport

7.Bank or LIC documents

8.Permanent Residential Certificate

9.Educational certificates and court orders

10.Refugee Registration certificate


LIST -B


1.Land documents

2.Board or university certificates

3.Bank/LIC/Post office records

4.Birth certificate

5.Ration card

6.Electoral rolls

7.Other legally acceptable documents

8.A circle officer or Grama panchayat secretary certificate for married women


விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!


வில்லங்கம் புரிகிறதா ...


இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!


உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...


உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!


அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!


ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!


மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...


அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!


அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...


இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!


பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!


இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...


நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...


1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...


நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...


இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!


அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...


இளம்பெண்களின் கதி என்னாகும் ...


சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!


குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....


ஒரு வழக்கறிஞராக ...


நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...


என உறுதியாகச் சொல்லுவேன் ...


NRC யைப் பொறுத்த வரை ...


நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...


மீறிக் கேள்வி கேட்டால் ...


நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...


டாகுமெண்ட்  இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...


முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...


தட்ஸ் ஆல் ...


தோழமையுடன்


வழக்கறிஞர் திலகர்


**மூத்த வழக்கறிஞர் #Thilakar #Sspk அவர்கள் பதிவு... அத்தா: Shahul Hameed அவர்கள் வழியாக.

பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள். Don’t be fooled into buying anything with branded oil.

 தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...

இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.


அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியதும் உங்கள் கடமை!...


சென்ற வாரம் என் நண்பர் ஓமான் நாட்டிற்குச் சென்றார். 


அவர் சென்றது ஒரு எண்ணெய் கம்பெனியின் வியாபாரத் தொடர்புக்கு சென்றவருடன்!.


சென்றவர்கள் அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலை என்று கூட்டிச் சென்றார்கள். 


அவரும் சோஹார் தாண்டி அபுதாபி திசையில் ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.


அவர்கள் கூறிய படியே அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைதான்!


அந்த தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியைக் கேட்ட போது நண்பர் மயக்கம் போடாத குறைதான்!


ஆம்! அந்தத் தொழிற்சாலையில் குரூட் ஆயிலை உபயோகப் படுத்தி ஹெக்சென் கழிவில் ஒரு ஆயிலை தயாரிக்கிறார்கள்.


சரி அதனால் என்ன?.


அது நிறமற்ற, மணமற்ற அடர்த்தி குறைவான ஒரு பொருள்.


மூச்சை இழுத்துப் பிடியுங்கள்... 


இங்கேதான் விஷயம்!


இந்தப் பொருளைத்தான் நாம் தினம் வாங்கும் சூரியகாந்தி எண்ணெய் , ரீபைண்ட் கடலை எண்ணெய் சனோலா எண்ணெய் என்று பெயரிட்டுள்ள அனைத்து பிரபல எண்ணெய்களிலும் 70 சதவீதம் கலக்கிறார்கள்!.


இது அமெரிக்காவின் FDA வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல !.


இந்தியாவில் இது குறித்த எந்த ஸ்டேண்டர்டும் இருப்பதாக கூட தெரியவில்லை!


ஆகவே இது வரை நாம் உபயோகித்து வந்த எண்ணெய் டீசலை விட சற்றே அதிகமாக சுத்திகரிக்கப் பட்ட ஒரு எண்ணெய். அதனால்தானோ என்னவோ கிலோ 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.


இந்தியாவின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சந்தைக்கு விற்று தன்னிறைவை எட்டுமா?!.


அது பற்றி இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை நோக்கிய போது அது 25%-30% வரையே உற்பத்தி நடக்குறது எனும் உண்மையும் தெரிந்தது.


பால்ம் ஆயில் என சொல்லி இந்த கழிவுகளை இறக்குமதி செய்து கலக்கின்றனர்.


ஆகவே எண்ணை வியாபாரிகள் இந்த குரூட் எண்ணையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லாமல் புத்தியை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள்.


எண்ணெய் சந்தை. தமிழகத்தில் எண்ணெய் சந்தை மதிப்பு ரூ 4100 கோடி ரூபாய்.


பெட்ரோலிய எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்யம் பற்றி பேசி என்ன பயன்..?


எனவே.... தயவு செய்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!


 நமது சந்ததிகளைக் காக்க இதுவே கடைசி தருணம்!.🚸


உண்மையான செக்கு எண்ணெய் விலை அதிகம் என்றாலும் அதையே உபயோகியுங்கள்.


உண்மையான விவசாயிகளை வாழ வைத்த புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கும்!.


பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள்.


⚠ டிவியை பார்த்து நம்பி வாங்கியது இனி போதும்...?⚠


அதே போன்று வெள்ளைச்  சர்க்கரை என்ற எமணையும் வீட்டிற்குள்ளேயே விட வேண்டாம். நாட்டுச் சர்க்கரைக்கு மாறிடுவோம்.

🍃🌾🍃🌾🍃🌾 

🌾🍃🌾🍃🌾🍃🌾🍃


(படித்ததில் அவசியம் என்று எனக்கு  தோனுச்சு)

நுட்பவியல் கலைச் சொற்கள் - Software name in tamil

 மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை 

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை 

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி


- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்குப்

பகிரலாம் -

Tuesday, September 22, 2020

மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ?

 மன முதிர்ச்சி என்றால் என்ன?

 What is Maturity of Mind ? 


1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 

    நம்மை திருத்திக்கொள்வது.

1. Correcting ourselves without trying to correct others.


2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)

    ஏற்றுக்கொள்வது.

2. Accepting others with their short comings.


3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 

கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3. Understanding the opinions of others from their perspectives.


4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4. Learning to leave what are to be avoided.


5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5. Leaving the expectations from others.


6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6. Doing whatever we do with peace of mind.


7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் 

    நிரூபிப்பதை விடுவது.

7. Avoiding to prove our intelligence on others.


8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 

என்ற நிலையை விடுதல்.

8. Avoiding the status that others should accept our actions.


9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9. Avoiding the comparisons of ourselves with others.


10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to keep our peace in our mind 

      without worrying for anything.


11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய 

    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the difference between the basic needs 

      and what we want.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல

     என்ற நிலையை அடைதல்.

12. Reaching the status that happiness is not connected  with material things.


இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.


Live your Life & Love your Life.

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.

 ♻ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு

நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....


💎நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...

நாளும் அது புரிவதில்லை 


🤞பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட

பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.


👍🏽இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...

ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!


💧நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .


👎நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....


🤝நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,

இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....


💓 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,

மனஅமைதியையும் தேடுங்கள் ...

மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,

ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை


💚இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....

அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .


🌹அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...

இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?


⚡சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...

15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.


💢கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!


🌏வேலை இல்லாதவனின் பகலும்,

நோயாளியின் இரவும் மிக நீளமானவை.


👉வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...


🖤மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...

அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...


👇எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....


🌈இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,

வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...

இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...


₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று

எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.


₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்

குற்றங்களுக்கு காரணம்!


₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து

 உனைசீரழிக்கும் துரோகியைவிட ...

 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்

எதிரி_மேலானவன் !.....


₹ அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து

பிரிந்து விட இயலவில்லை....

பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்

ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது


₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்

கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்

ஒருபோதும் இழந்து விடாதே..


₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,

கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது

கிடைப்பதில்லை...


₹பேரின்பம் வேண்டாம்...

சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........


₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை

விட நம் காதுகளை மூடிக்கொள்வது

மிகச் சிறந்தது......


£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..


£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!

 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!

 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!


£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....


£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்

சாவோடு போராடி வாழ்வதிலுமே...

வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!! 


அருமையான வாக்கியங்களாக........ எனக்கு வந்ததை.......

உங்களுடன் பகிர்கிறேன்........

படித்து.....பயன்பெற

முயற்சிப்போம்.

வரும்முன் காப்போம் - முழுமையாக விழித்துக் கொள்வோம்...

இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...

🔴 
சிகப்பில் இருந்தாலும் சரி...

🟠 
ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

🟢 
பச்சையில் இருந்தாலும் சரி...

🏢
கடைகள் திறந்தாலும் சரி...

திறக்கப்படாவிட்டாலும் சரி...

🔔
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

 🔕
தளராவிட்டாலும் சரி...

🚷
ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி...

🚸
தடுக்காவிட்டாலும் சரி...

📢அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி...

 📣
போடாவிட்டாலும் சரி...

🔈
மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி...

 🔇
பேசாவிட்டாலும் சரி...

👨‍👩‍👦‍👦
*ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...* 

உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

🌐
இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்...

நீண்ட காலம் இருக்கும். பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்...

💅
அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்...

👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦🧕👲👨‍🎤🧟‍♂
கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்...

🚶‍♂
லிஃப்டில் கூட்டம் இருந்தால்...

படிக்கட்டு வழியாக ஏறவும் இறங்கவும்...

📍
லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்...

😷
பொது வெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்...

🤦‍♂🤦‍♀
அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்...

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்...

👀
கண்ணை கசக்குவது...

👃மூக்கு நோண்டுவது...

🥱
வாயில் சொரிவது.. 

🤭
முகத்தில் கை வைப்பது... 

போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.

♦️
எங்கும் எச்சில் துப்பாதீர்கள்...

♦️
கைக் குட்டை சிறிய துண்டு வைத்து தும்முங்கள் இருமுங்கள்...

♦️
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்...

♦️
கும்பல் கூடுவதை முற்றிலும் தவிருங்கள்...

♦️
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்...

♦️
அலுவலகம்...
வீடு...
கடை... 

அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

♦️
ஆட்டோ...
ஷேர் ஆட்டோ...
டாக்சி...
பஸ்...
ட்ரெயின்... 

பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

♦️
தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்...

♦️
திருமணம்...
பர்த்டே பார்ட்டி... 

ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

♦️
வாய்ப்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய் வாழ்த்து அன்பளிப்பு அனுப்பலாம்...

♦️
பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்...

 ♦️
அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்...

♦️
முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்...

♦️
வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

♦️
கிளினிக் மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்....

♦️
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்....

♦️
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி...
நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

♦️ 
அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!! 

*வரும்முன் காப்போம்*

முழுமையாக விழித்துக் கொள்வோம்...

இந்தத் தகவலை நல்லெண்ணம் கொண்டவர்கள் படித்தால் 4 பேருக்கு அனுப்புங்கள்...