Tuesday, September 22, 2020

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.

 ♻ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு

நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....


💎நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...

நாளும் அது புரிவதில்லை 


🤞பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட

பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.


👍🏽இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...

ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!


💧நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .


👎நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....


🤝நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,

இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....


💓 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,

மனஅமைதியையும் தேடுங்கள் ...

மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,

ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை


💚இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....

அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .


🌹அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...

இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?


⚡சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...

15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.


💢கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!


🌏வேலை இல்லாதவனின் பகலும்,

நோயாளியின் இரவும் மிக நீளமானவை.


👉வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...


🖤மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...

அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...


👇எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....


🌈இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,

வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...

இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...


₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று

எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.


₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்

குற்றங்களுக்கு காரணம்!


₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து

 உனைசீரழிக்கும் துரோகியைவிட ...

 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்

எதிரி_மேலானவன் !.....


₹ அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து

பிரிந்து விட இயலவில்லை....

பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்

ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது


₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்

கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்

ஒருபோதும் இழந்து விடாதே..


₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,

கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது

கிடைப்பதில்லை...


₹பேரின்பம் வேண்டாம்...

சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........


₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை

விட நம் காதுகளை மூடிக்கொள்வது

மிகச் சிறந்தது......


£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..


£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!

 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!

 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!


£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....


£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்

சாவோடு போராடி வாழ்வதிலுமே...

வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!! 


அருமையான வாக்கியங்களாக........ எனக்கு வந்ததை.......

உங்களுடன் பகிர்கிறேன்........

படித்து.....பயன்பெற

முயற்சிப்போம்.

No comments:

Post a Comment