Saturday, February 15, 2014

பென்சில்:



Thursday, February 13, 2014

அன்புக்கு” எதுவுமே தெரியாது “அன்பைத் தவிர

என் நண்பனின் காதல் கதையை அப்படியே பதிவு பண்ணியிருக்கேன். என் அத்தை பொண்ணைதான் கட்டிக்கணும்னு சின்ன வயசிலேயே முடிவு பண்ணிட்டாங்க. அவளுக்கு என் மேல விருப்பம். ஆனா எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. 

எல்லாருக்கு அந்தந்த வயசில காதல் வரும். அது போலத் தான் எனக்கும் காலேஜ் படிக்கும்போது வந்தது. 

நான் ரொம்ப பணக்காரன். ஹேண்ட்சம் வேற. படிச்சது கோ - எஜூகேஷன். நான் ரெண்டாவருஷம். லவ்வர் முதல் வருஷம். வெவ்வேற மேஜர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில அவளைப் பார்த்த உடனே, ஒரு ஸ்பார்க் கிடைச்சது. அதிலேர்ந்து அவ நினைப்பு. ஆரம்பத்தில அவளுக்கு இவன் லவ் பண்றது தெரியலை. கொஞ்ச நாள் கழிச்சு தெரியவந்த போது, ஏத்துக்கலை. அவன் கேட்டானாம், ஜாதி,பைசா தான் ப்ரச்சனையா உனக்கு. அதுக்கு அவள்,நீயும் நானும் வேற ஜாதிதான். மிடில்க்ளாஸ் நான். இது எல்லாத்துக்கும் மேல எனக்கு, உன்கிட்ட லவ் வரணும். எதுவும் வரலைன்னு க்ளியரா சொன்னா. 

ஆனா நீ தான் எனக்கு மனைவியா வரணும்னு அன்பா சொன்னேன். அதுக்கப்புறம், காலேஜ் ஃபுல்லா எல்லார்கிட்டேயும் லவ்வ சொன்னேன். அவளை டார்சர் பண்ணேன். எல்லாத்துக்கும் மேல ரொம்ப ரொம்ப பொறுமையா இருந்தா.என் காலேஜ், கடைசி வருஷம் கடைசிநாள் அன்னைக்கு என்கிட்ட பேசணும்னு சொன்னா. நான் 4 ஃப்ரண்ட்ஸ்கூட சந்தோஷமா இருந்தேன். அவ மட்டும் தனியா வந்தா. நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேட்பேன்.செய்வையா? நான் சொன்னேன், என் உயிரைகேட்டாலும் கொடுப்பேன். உடனே ஒரு ப்ராமிஸ் மட்டும் கேட்டா. எனக்காக உயிரைக் கொடுக்கறேன்னு சொல்ற, போய் உன்னை விரும்பற பொண்ணுக்கு வாழ்க்கைக் கொடு. அவளோட குடும்பம்,குழந்தைன்னு சந்தோஷமா இருன்னா.

எனக்கு கோபம் வந்து அவளை தகாத சொற்களால “சாபம்” மிட்டேன்.

அப்புறம் அத்தைப் பெண்ணோட திருமணம் ஆச்சு. என் மனைவிகிட்ட என்காதல் விஷயத்தை சொன்னேன்., அப்போ உன்னைய நல்லா சந்தோஷமா வெச்சுக்கறேன். ஆனா என் மனசுல அவ மட்டும் தான். என் மனைவி புரிஞ்சுகிட்டா. இதுக்கு இடையில என் மனைவி, லவ்வரை திருமணத்திற்கு முன்னரே மீட் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கா. அதுக்கு யாரோ சொல்றதை வெச்சு என்னைய பார்க்க வந்திருக்கீங்க.எனக்கு துளி கூட காதல் இல்லை. கண்டிப்பா நீங்க அவரோட வாழ்வீங்கன்னு சொன்னாளாம்.

எங்களுக்கு ஒரு பையன்,ஒரு பெண். மனைவி சம்மதத்துடன் என் பெண்ணுக்கு லவ்வர் பெயரை வெச்சேன். குடும்பத்தோட எதிர்பாரத இடத்தில 7 வருஷம் கழிச்சு சந்திச்சேன். லவ்வர் மட்டும் வந்திருந்தா. திருமணம் ஆகி இன்னும் கூடுதல் அழகோட இருந்தா. என் மனைவிகிட்ட சொன்னேன். அவ கூட கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வர்ரேன்னு. நாங்க ரெண்டு பேரும் பொதுப் பேச்சுகள் பேசினோம்.

உணமையிலேயே, என் லவ்வர்க்கு எல்லாத் திறமையிருந்தும், அவ எல்லார்கிட்டேயும் காட்டின அன்பு யாராலையும் கொடுக்கமுடியாது. நான் கோபத்தில சொன்ன வார்த்தைகள் அவ வாழ்க்கையில பலிச்சிருச்சு. ஆனா அவ எதையும் பெரிசா எடுத்துக்காம அதே நட்போட சிரிச்சா. 

அவ சொன்னா, அன்புங்கறது எப்போ யார்கிட்ட வரும்னு தெரியாது. கல்யாணம் ஆனவங்க,ஆகாதவங்க கணக்கில்லை... உனக்கு என் அன்பு கிடைக்கலை, அதனால உன் வலியை சாபமா மாத்தின. நான் அந்த வலியை வரமா ஏத்துக்கிட்டேன். வாழ்க்கையில எதுக்கும் “காரணம்” “காரியம்” தேடாத. வர்றதை அக்செப்ட் பண்ணிக்கோ. முடியாத குழந்தைகளை படிக்கவை. எல்லாருக்கும் உதவியா இரு. எனக்கு அது தான் சந்தோஷம்னு சொன்னா. 
அட்ரஸ் கேட்டபோது, என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்னு அனாவசியமா ப்ரச்சனை வரவேணாம், சொல்லிட்டு, போய்ட்டா. 

அவன் சொன்னான், இன்றுவரை என் மனசில அவதான் இருக்கா. அவ நட்பு போல என் அன்பும் பவித்ரமானது. அதைவிட விதி வலியது என்ன பண்றது.

”அன்புக்கு” எதுவுமே தெரியாது “அன்பைத் தவிர” 

Yes Love Is Unconditional!!!!!


https://www.facebook.com/subhasri.sriram/posts/554623751300749

உண்மையைச் சொல்ல முடிந்தால்..

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

*

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

*

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

*

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

*

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

*

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

*

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

*

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

*

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

மாத்தி யோசிங்க

ஊரில் ஒரு அரசன். அவனுக்கு ஒரு கண்ணும் ஒரு காலும்
குறைபாடுடன் இருந்ததாம்.

அந்த ஊரில் இருந்த கலைஞர்களை கூப்பிட்டு தன்னை ஒரு
அழகான சித்திரத்தில் வடிக்க சொன்னானாம் அரசன்.

ஒருவரும் முன் வரவில்லை. குறைபாடுடன் இருக்கும் ஒருவனை
எப்படி அழகாக காட்ட முடியும் என்று தயங்கினார்கள்.

ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன் வந்து தான் வரைவதாக
கூறி, ஒப்புக்கொண்டதோடு இல்லாமல், அதி அற்புதமாக வரைந்தும்
காட்டினானாம் . எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.

அவன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை
நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக்
கொண்டும் இருப்பது போல் வரைந்திருந்தானாம்.

சின்ன கதை தான் என்றாலும் நம் கண்களை திறக்கிறது அல்லவா ?

மாத்தி யோசிங்க…வாழ்க்கையில் வெல்லுங்கள்..!

காணாமல் போனவர்

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

< படித்ததில் பிடித்தது >