Thursday, February 13, 2014

மாத்தி யோசிங்க

ஊரில் ஒரு அரசன். அவனுக்கு ஒரு கண்ணும் ஒரு காலும்
குறைபாடுடன் இருந்ததாம்.

அந்த ஊரில் இருந்த கலைஞர்களை கூப்பிட்டு தன்னை ஒரு
அழகான சித்திரத்தில் வடிக்க சொன்னானாம் அரசன்.

ஒருவரும் முன் வரவில்லை. குறைபாடுடன் இருக்கும் ஒருவனை
எப்படி அழகாக காட்ட முடியும் என்று தயங்கினார்கள்.

ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன் வந்து தான் வரைவதாக
கூறி, ஒப்புக்கொண்டதோடு இல்லாமல், அதி அற்புதமாக வரைந்தும்
காட்டினானாம் . எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.

அவன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை
நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக்
கொண்டும் இருப்பது போல் வரைந்திருந்தானாம்.

சின்ன கதை தான் என்றாலும் நம் கண்களை திறக்கிறது அல்லவா ?

மாத்தி யோசிங்க…வாழ்க்கையில் வெல்லுங்கள்..!

No comments:

Post a Comment