புதிய நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்திய, ஓய்வு பெற்ற பொறியாளர் பெரியண்ணன்: நான், சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி கிராமத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர்.
Thursday, January 31, 2013
Wednesday, January 30, 2013
என் முயற்சியை பரீட்சை செய்தேன்
ஒருவரே நடித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கிய, "ஒன்' ஆங்கில படத்தின், "ஒன் மேன்' ஹீரோ ராஜ்குமார்: சங்ககிரியின் நெடும்பாறைக்காடு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். ஓய்வு நேரங்களில் தாத்தா தெருக்கூத்தும், அப்பா மேடை நாடகமும் நடத்தி வந்தனர். கலைப் பாரம்பரியம் விட்டுப் போகாமல், ஓய்வு நேரங்களில், சினிமா எடுக்க முயற்சித்தேன். விவசாயத்தில் வரும் பணத்தில், ஒரு முழு படச் செலவை சரிக்கட்ட முடியாது. எனவே, தொழில்முறை கலைஞர்களை தவிர்த்து, சொந்த ஊரில் வசிப்பவர்களையே நடிக்க வைத்து, "வெங்காயம்' என்ற திரைப்படம் எடுத்தேன். பேர் சொல்லும் படமாக இருந்தாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
என்னை மட்டுமே வைத்து, "ஒன்" என்ற ஆங்கில படமெடுக்க, முக்கிய காரணம் பணம். இருந்தாலும், என் அதிகபட்ச தனிமனித முயற்சியை, பரீட்சித்துப் பார்த்து விட ஆசை. சினிமா என்பது இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, அலுவலக பணி, லைட் மேன் ஒர்க் என, அனைவரது கூட்டு முயற்சியால் ஆனது. என்னை மட்டுமே வைத்து, அனைத்து சினிமா வேலைகளிலும், அதிகபட்ச தனிமனித முயற்சியை காட்டினேன். ஒளிப்பதிவு முதல் அலுவலக பணி வரை, அனைத்தையும் செய்தேன். ஒரே ஆள் இத்தனை சுமைகளை தாங்கி, ஏன் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.
படத்தில் வரும் பெண்கள் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களும் நானே நடித்தவை. வணிக ரீதியிலான, அத்தனை, "கலர்புல்' அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, 500 பேர் திரையரங்கில் படம் பார்க்கும் காட்சியில், 500 பேராக நானே நடித்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்கும், மற்றொரு பாத்திரத்திற்கும், லேசான முகச் சாயல் இருக்குமே தவிர, வேறெந்த ஒற்றுமையும் இருக்காது. ஜாக்கிசான், "சைனீஸ் ஸோடியாக்' படத்தில், 15 துறைகளில் ஈடுபட்டார், என்பதே உலக சாதனை. ஆனால், நான் மட்டுமே அனைத்து துறைகளுக்கான வேலை செய்து, எப்படி, "ஒன்' என்ற ஆங்கில படத்தை, தயாரித்து எடுத்தேன் என்பதையும், கேமராவில் பதிவு செய்திருக்கிறேன்.
Tuesday, January 29, 2013
ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறீர்களா?
மன நல மருத்துவர் பாரதி விஸ்வேஸ்வரன்: ஓ.சி.டி., எனப்பதும், "அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' என்ற நோய் குறித்து, யாருக்கும் தெரிவதில்லை. அர்த்தமில்லாத சிந்தனைகள், மீண்டும் மீண்டும் தோன்றுவது தான் இதற்கு காரணம். இதில், நான்கு வகை உண்டு. அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் தொந்தரவு செய்தால், அளவுக்கதிகமாக, சுத்தத்தை எதிர்பார்ப்பர். அடிக்கடி குளிப்பது, பொருட்களை பலமுறை கழுவி வைப்பது, பல முறை கை கழுவுவது போன்றவற்றில், அடிக்கடி ஈடுபடுவர். இரண்டாவது, சந்தேகத்தால் வரக் கூடிய குழப்பம்.
Monday, January 28, 2013
தெளிவுக் கதை
ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில்
இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில்
இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்
போவது?
இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
பிரசவம்
மருத்துவமனையில் பிரசவத்திற்கு மனைவி வான்மதியை
சேர்த்துவிட்டு வராண்டாவில் உலாத்தினான் மகேஷ்.
லேபர் வார்டிலிருந்து மனைவி வலியால் கத்துவது சன்னமாக
கேட்டது மகேஷுக்கு. பதை பதைப்புடன் காத்திருந்தான்.
Thursday, November 1, 2012
வருந்தாத மாக்கள்
வருந்தாத மாக்கள் :
------------------------------ --

கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்
தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு
பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்
ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்
திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்
- வை . நடராஜன்
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்
தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு
பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்
ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்
திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்
- வை . நடராஜன்
Wednesday, May 9, 2012
கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!
கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
இயற்கை மருத்துவம்
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
முடி கருப்பாக வளர
உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்
Subscribe to:
Posts (Atom)