Friday, October 29, 2010

அனிமேஷன் படித்தால் உடனே வேலை!

அனிமேஷன் படித்தால் உடனே வேலை! அனிமேஷன் துறையில் தொடர்ந்து சாதித்து வரும் நிஷாந்த்: அனிமேஷன் குறித்த விழிப்புணர்வு, தமிழக மாணவர்கள் மத்தியில் போதிய அளவு இல்லை. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் துறை அனிமேஷன். வேலைவாய்ப்பு இருக்கும் அளவுக்கு திறமையான நபர்கள் இத்துறையில் இல்லை. வட மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழக மாணவர்கள் எண்ணிக்கை, இத்துறையில் குறைவாகவே உள்ளது. அனிமேஷன் துறைக்கு வருவதற்கு, பொறியியல் அளவுக்குப் படிக்க வேண்டியதில்லை. அனிமேஷன் படிக்க கொஞ்சம் ஆங் கில அறிவு, பிளஸ் 2 படித்திருந்தால் போதும். மேலும், "மாயா, சாப்ட் இமேஜ், பிளாஷ், எக்ஸ்.எஸ்.ஐ., 3டி மேக்ஸ்' போன்ற மென்பொருள்களில் ஏதாவது ஒன்றில் நல்ல அறிவு பெற்றிருந்தாலே, அனிமேஷன் துறையில் சாதிக்கலாம். நம் நாட்டில், கார்ட்டூன் சேனல்கள் அதிகரித்து விட்டன. கார்ட்டூன் படங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இங்கேயே தயாரிக்கப்பட்டால், அன்னியச் செலாவணியும், வேலைவாய்ப்பும் அதிகமாகும். சிறந்த அனி மேட்டராக வேண்டுமானால், ஓரளவு ஓவியத்திறன் அவசியம். திறமையான அனிமேட்டர்கள், தொடக்க நிலையிலேயே 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். தற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தில் அனிமேஷன் படிக்க வாய்ப்பிருக்கிறது. சென்னையில் அனிமேஷன் படிப்பைக் கற்றுக்கொடுக்கவும், படித்து முடித்தவுடன், வேலை வாய்ப்பைத் தருவதற்கும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. வீடியோ கேம்ஸ், வெப் டிசைனிங், கட்டடக் கலை, மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளிலும், அனிமேஷனை தவிர்க்க முடியாது. "இ -லேர்னிங்' தற்போது முக்கியத்துவம் வாய்ந்த துறையாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் பணியாற்ற, கைதேர்ந்த அனிமேட் டர்கள் எப்போதும் தேவைப்படுகின்றனர்.

Friday, October 22, 2010

இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்!

ஒரு காலமிருந்தது... மாதம் ரூ 4000 சம்பளம் கிடைத்தால் போதும், வீடு, வாகனம், வசதியான வாழ்க்கை என நிம்மதியாக இருக்கலாம் இந்தியாவில், என்ற காலம் ஒன்றிருந்தது.

ஆனால் இன்று... ரூ 40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசி கடன்கள் நின்றபாடில்லை. வருமானம் இருக்கிறதோ இல்லையோ, விலை கூடவோ குறைவோ... தேவைக்கும் அதிகமாகவே நுகர் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில், பெரும் கடனாளிகளாகிக் கொண்டிருக்கும் நிலை.

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தை கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கியதன் விளைவு... கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாட்டின் விலைவாசி சராசரியாக 126 சதவீதம் உயர்ந்துவிட்டது.

மத்திய அரசின் புள்ளி விவரத்துறை அறிக்கையின்படி, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணவான அரிசி விலை 2006-ல் குவின்டாலுக்கு ரூ 3031 ஆக இருந்தது. இன்று அதே அரிசி, அதே எடை, ஆனால் விலை ரூ 6859!

வெங்காயத்தின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சியின் விலை 44 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது (கோழி / ஆடு). மீன் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது! 25 ரூபாய் விற்ற ஒரு கிலோ பூண்டு, ரூ 200-ல் வந்து நிற்கிறது. இவையெல்லாம் சும்மா... சாம்பிள்கள்தான்.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண்களைப் பொறுத்தவரை 30 சதவீத உயர்வு காணப்படுகிறது. இதற்கு முன் எப்போதுமே பார்த்திராத மோசமான விலை உயர்வு, என அலறுகிறார்கள் நிபுணர்கள்.

பொருளியல் நிபுணர்களிடம் பேசியதில், "இந்த விலை உயர்வு பற்றி வெளிவந்திருக்கும் விவரங்கள் எல்லாமே, ஐஸ் மலையின் ஒரு சிறிய நுனிப்பகுதிதான். அதற்குக் கீழே உள்ள பிரமாண்ட ஐஸ் மலை இருக்கிறதே... அதுதான் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே உடைக்கக் கூடியதாக உள்ளது. யார் சொல்லி இந்த லைஃப் ஸ்டைலுக்கு மாறினோம்.... நாமாக... விளம்பரங்கள், மார்க்கெட்டிங் உத்திகளைப் பார்த்துத்தானே... இப்போதாவது ஒரு நிதானத்துக்கு வரவேண்டும் மக்கள் [^]. இல்லாவிட்டால், இந்தக் கப்பல், விலை என்ற ஐஸ் மலையில் மோதிச் சிதறுவதைப் பார்த்துக் கொண்டு அழும் அமெரிக்க நிலைதான் இந்தியாவுக்கும்..." என்கின்றனர் கவலையுடன்.

நாட்டின் நான்கு பெரு நகரங்களில் விலை நிலையை ஆராய்ந்ததில், இருப்பதிலேயே தலை நகர் டெல்லியில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் சென்னை [^] மகா மோசம். நாட்டின் சராசரி விலைவாசி உயர்வை விட அதிகமாக, 146 சதவீத உயர்வாக உள்ளது.

லைஃப்ஸ்டைல் மாற்றம்தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர் பொருளியலறிஞர்கள். இந்த லைஃப்ஸ்டைல்தான் ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ செலவுக்கென்று தனி பட்ஜெட் [^] போட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. வாழ்க்கை, சுகாதாரம்... இரண்டையுமே பாதித்துள்ள இந்த நவீன வாழ்க்கை முறை விபத்தில் முடியும் முன், இப்போது தேவை ஒரு உடனடி ப்ரேக்!

அதை எப்படி, எந்த கட்டத்தில் போட்டுக் கொள்ளப் போகிறோம்?

Thursday, October 14, 2010

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே

    நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது தடம் புரண்டு போனா அது தப்புடா சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு *என்றும் அன்புடன் சா.கி.நடராஜன்.

Wednesday, July 28, 2010

எண்ணெய் கசிவை அகற்ற புதிய கண்டுபிடிப்பு :


கடலில் எண்ணெய்க் கசிவை அகற்ற அமெரிக்கர்களுக்கு யோசனைக் கூறிய தமிழ் விஞ்ஞானி சேஷாத்ரி ராம்குமார்: கடலில் உள்ள எண்ணெய்க் கசிவை அகற்ற மூன்று அடுக்குகளால் ஆன பைபர்டெக்கை கண்டுபிடித்துள்ளேன். பைபர்டெக் என்பது நெய்யப்படாத துணி, சுருக்கமாக, பஞ்சால் செய்த சாண்ட்விட்ச் என்று சொல்லலாம். கீழே ஒரு அடுக்குப் பஞ்சு, நடுவில் கார்பன், மேலே மீண்டும் ஒரு அடுக்குப் பஞ்சு இது தான் அமைப்பு.தற்போது கடற்கரையையும், கடலின் மேல் பரப்பில் படர்ந்துள்ள எண்ணெயையும் சுத்தப்படுத்துபவர்கள் கைக்கு உறையும், காலுக்கு நீண்ட கம்பூட்சும் அணிந்து சுத்தப்படுத்துவது பாதுகாப்பானதல்ல. காரணம் கடலில் படர்ந்துள்ள எண்ணெய்க் கசிவிலிருந்து நச்சு வாயுக்கள் வெளிப்படும். இது போன்ற சமயங்களில் பைபர்டெக்கை பயன்படுத்தினால், தன் எடையைப் போல் 40 மடங்கு எண்ணெயை அது உறிஞ்சிக் கொள்ளக் கூடியது. அதன் நடுவில் உள்ள கார்பன் நச்சு வாயுக்களை உள்வாங்கிக் கொள்ளும். எனவே, எண்ணெய், அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு இரண்டையும் அகற்றி விடலாம். அது மட்டுமல்ல, இந்த துணியைப் பிழிந்து நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தலாம்.எண்ணெயை சுத்தப்படுத்துவதில் தற்போது பயன்பாட்டில் உள்ள, "பூம்' பஞ்சு உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயைத் தான் உறிஞ்சும். அதுவும் தவிர அது செயற்கை இழைகளால் ஆனது. அதைப் பயன்படுத்திய பின் நிலத்தில் புதைப்பதால், அது எளிதில் மக்காது. ஆனால், பஞ்சு இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்டது; அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை.இந்தியா போன்ற நாடுகளில், "பைபர்டெக்கிற்கு' பயன்பாடு அதிகம் உள் ளது. ராணுவத்தில் பல விஷயங்களுக்கு, உதாரணமாக, நச்சு வாயுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் மாஸ்க் செய்ய பயன்படுத்தலாம்.

Tuesday, July 27, 2010

அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! 
 அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன ! 
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.! 
ழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!

ருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!

மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல

சென்னை : ""மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல,'' என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சமுதாய விழிப்புணர்வு அமைப்பான, சுடர் வம்சத்தின் 5ம் ஆண்டு விழா சென்னை எழும்பூர், "இக்சா' மையத்தில் நேற்று நடந்தது. இந்த அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளாக சமுதாய மற்றும் தனி மனித வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மாணவர்களிடம் நாட்டுப்பற்று, மனிதநேய உணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகள் சமுதாய விழிப்புணர்வு பணியில், மற்ற அமைப்புகளிலிருந்து மாறுபட்டு சிறப்பாக "சுடர்வம்சம்' செயல்படுகிறது. கல்வி தான் மாணவர்களின் சொத்து. பொருளாதார ரீதியில் மாணவர்கள் பின்தங்கியிருந்தாலும், லட்சியங்களை அடைவதில் பின் தங்கிவிடக் கூடாது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடை கிடையாது. கல்வி இல்லையென்றால் தாய், தந்தை கூட மதிக்க மாட்டார்கள்.இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.மாணவ, மாணவியர் 71 பேருக்கு "சுடர்வம்சம்' சார்பில் கல்வி ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் புத்தகங்களை கல்வியாளர் ரமேஷ் பிரபா வழங்கினார்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, கவிஞர் பிறைசூடன் மற்றும் காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் பிரபாகர் ஆகியோருக்கு சுடர்வம்சம் சார்பில், தொழிலதிபர் சீனா தானா விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் ரகுராஜ், ஆலோசகர் சந்திரன் சாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

குழ‌ந்தைகளே நேரத்தை ம‌தியு‌ங்க‌ள்

குழ‌ந்தைகளா.. உ‌ங்‌களது பெ‌ற்றோ‌ர் ‌தினமு‌ம் படியு‌ங்க‌ள் படியு‌ங்க‌ள் எ‌ன்று ‌பு‌த்‌திமத‌ி கூ‌றி‌க் கொ‌ண்டே இரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌அது உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌க்காத பு‌த்‌திம‌தியாக இரு‌க்கு‌ம்.


அவ‌ர்க‌ள் உ‌ங்களை படியு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவ‌த‌ற்கு மு‌க்‌கிய‌க் காரண‌ம், இ‌ப்போதுதா‌ன் ‌நீ‌ங்க‌ள் படி‌ப்பத‌ற்கான நேர‌ம். இ‌ந்த நேர‌த்தை ‌வீணடி‌த்து‌வி‌ட்டா‌ல் ‌பிறகு ‌நீ‌ங்க‌ள் படி‌க்க ‌நினை‌த்தாலு‌ம் படி‌க்க முடியாது. இதனை உண‌ர்‌ந்துதா‌ன் உ‌ங்களது பெ‌ற்றோ‌ர் உ‌ங்களு‌க்கு பு‌த்‌திம‌தி கூறு‌